search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன்.
    • அவ்வைப் பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன்.

    முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

    தெய்வ யானை கிரியா சக்தியாகவும் வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.

    சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்த சிவக்குமரன், சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன்.

    இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன்.

    வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீர வாகுத் தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகா சூரன் சிங்கமுகன் சூரபதுமன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன்,

    அவ்வைப் பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன்.

    நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்பசிவ சாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த் தலைவன்,

    வடக்கே பிறந்து தெற்கே வந்தாலும் முற்றிலும் செந்தமிழ் நாட்டிற்கே உரியவன்.

    • இந்நாளில் சூரிய பகவான் விரதமிருந்து முருகப்பெருமானின் ப்ரீதியைப் பெற்றார் என்கிறது புராணம்.
    • விசாக விரதம் இருப்போர்க்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

    முருகப்பெருமான் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று திரு அவதாரம் செய்தவர்.

    இந்நாளில் சூரிய பகவான் விரதமிருந்து முருகப்பெருமானின் ப்ரீதியைப் பெற்றார் என்கிறது புராணம்.

    விசாக விரதம் இருப்போர்க்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

    இந்த விரதத்தை வைகாசி மாதம் விசாகத்தன்று தொடங்கி, தொடர்ந்து செய்து வந்தால் குடும்பத்தில்

    சகல சவுபாக்கியங்களும் பொங்கிப் பெருகும்.

    • தந்தைக்கு “ஓம்” என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.
    • ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    தந்தைக்கு "ஓம்" என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    அ- படைத்தல் உ- காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    அ, உ, ம என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துகளுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

    முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ, உ, ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவாக உள்ளான்.

    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவார்கள்.

    முருகனுக்குப் படை வீடு ஆறு. அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி ஆகும்.

    • பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான்.
    • முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம்.

    முருகப் பெருமான் தமிழ்க் கடவுள். சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் முருகனை வணங்கி வருகின்றனர்.

    பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான்.

    முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம்.

    எனவே தமிழே முருகன், முருகனே தமிழ் என்பார்கள்.

    முருகன் "ஓம்" எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான்.

    பிரணவம் என்றால், "சிறந்த புதிய ஆற்றலைத் தருவது" என்று பொருள்.

    முருகன் தன்னை நாடி, தேடி வருபவர்களுக்கு புதிய ஆற்றலை வற்றாமல் கொடுக்கிறான்.

    • சித்திரை, ஐப்பசி, ஆவணி மாத பரணி, வெள்ளி, செவ்வாய் கிழமைகள் யோக பைரவருக்கு சிறப்பான தினங்கள்.
    • எழுதி வைத்து தேய்பிறை அஷ்டமி பவுர்ணமி தினங்களில் படித்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.

    ஓம் பயம் போக்குபவரே போற்றி

    ஓம் குதிரை வாகனரே போற்றி

    ஓம் யோகினி தேவதையே போற்றி

    ஓம் கல்லாபினி தேவியே போற்றி

    ஓம் அன்பு வடிவே போற்றி

    ஓம் ஆனந்த உருவே போற்றி

    ஓம் இனியதைச் செய்வாய் போற்றி

    ஓம் பயம் போக்குபவரே போற்றி

    ஓம் குதிரை வாகனரே போற்றி

    ஓம் பொன்கோட்டை வசிப்போய் போற்றி

    ஓம் மீன்கொடி மன்னவா போற்றி

    ஓம் பெரும் செல்வ மகனே போற்றி

    ஓம் மகர ஆலயத் தெய்வமே போற்றி

    ஓம் பாக்யேஸ்வரி பதியே போற்றி

    ஓம் ஆனந்தவல்லி மாக்பரே போற்றி

    ஓம் உல்லாசினி யே போற்றி

    ஓம் நிராகுலியே போற்றி

    ஓம் யோகினி தேவதையே போற்றி

    ஓம் கல்லாபினி தேவியே போற்றி

    ஓம் இதேஸ்வரி தேவியே போற்றி

    ஓம் விநோதினி சக்தியே போற்றி

    ஓம் சட்குல தேவியரே போற்றி

    ஓம் அட்ட பைரவரே போற்றி

    ஓம் அசிதாங்க பைரவரே போற்றி

    ஓம் குரு பைரவரே போற்றி

    ஓம் சண்ட பைரவரே போற்றி

    ஓம் குரோத பைரவரே போற்றி

    ஓம் உன் மத்த பைரவரே போற்றி

    ஓம் கபால பைரவரே போற்றி

    ஓம் பீஷண பைரவரே போற்றி

    ஓம் சம்மார பைரவரே போற்றி

    ஓம் அதிஷ்டம் தரும் பைரவரே போற்றி

    ஓம் சௌபாக்ய பைரவரே போற்றி

    ஓம் ஐஸ்வர்யம் தரும் பைரவரே போற்றி

    ஓம் பொன்மணி தனம் அருள்வாய் போற்றி

    ஓம் யோகங்களைக் கொடுக்கும் யோக

    பைரவ தேவனே போற்றி! போற்றி!

    இந்த போற்றித் திருஉருவை வியாபாரம், நகைக்கடை வைத்திருப்பவர்கள் தங்கள் லாபக்கணக்கு நோட்டு புத்தகம் மற்றும் ரெக்கார்டுகளில் எழுதி வைத்து தேய்பிறை அஷ்டமி பவுர்ணமி தினங்களில் படித்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.

    சப்த முகீ என்கிற 7 முக ருத்ராட்சத்தை கல்லாப் பெட்டியில் வைத்து 3 முறை கூறிட யோக பைரவர் அருள் செய்து வியாபார வசியத்தை ஏற்படுத்திட மக்கள் வருவார்கள்.

    சித்திரை, ஐப்பசி, ஆவணி மாத பரணி, வெள்ளி, செவ்வாய் கிழமைகள் யோக பைரவருக்கு சிறப்பான தினங்கள்.

    எல்லா மாதங்களிலும் வரும் பவுர்ணமி அன்று அதிகாலை யோக பைரவரை செவ்வரளி, ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்து மார்பில் அத்தர்புணுகு, ஜவ்வாது மார்பில் சாற்றுவது நல்லது என்று பைரவ பூஜை செய்பவர்கள் சொல்வது வழக்கம்.

    • நான்கு திக்குகளிலும் மந்திர பைரவர், யந்திர பைரவர், மணிபைரவர், ஒளஷ பைரவர் எனும் நான்கு பைரவர்கள் அமர்ந்துள்ளனர்.
    • அதனுள் இருக்கும் வீதிகளில் கடல், மலை ஆகாசத்தைக் குறிப்பன.

    இவ்வாறு யோக பைரவரையும் அவரது உபதேவதைகளையும் வர்ணிக்கும் படியாக அமைந்திருப்பது தான் சௌபாக்ய பைரவ யந்திர வடிவம் ஆகிறது.

    இதன் நடுவே நமக்கு உடன்பலன் தரக்கூடிய அஷ்ட பைரவர்கள் தளங்களிலும் பதினாறு இதழ்த் தாமரைகளில் 16 லட்சுமிகளும், சக்ர வானகிரி சப்த சாகரங்களில் தேவர்கள் வழிபடப்படுகிறார்கள்.

    நான்கு புறங்களிலும் மூன்று வீதிகள் தனித்தனியாக உள்ளன.

    நான்கு திக்குகளிலும் மந்திர பைரவர், யந்திர பைரவர், மணிபைரவர், ஒளஷ பைரவர் எனும் நான்கு பைரவர்கள் அமர்ந்துள்ளனர்.

    அதனுள் இருக்கும் வீதிகளில் கடல், மலை ஆகாசத்தைக் குறிப்பன.

    இந்த அமைப்போடு கூடிய யோக பைரவச் சக்கரத்தை ஸ்தாபனம் செய்து வழிபடுபவன் இக்கலியுகத்தில் ஆபத்துகளிலிருந்து காக்கப்பட்டு தேவர்கள், ஆவரண தேவதைகளின் அருள்பெற்று சௌபாக்ய பைரவர் என்ற பெயருள்ள யோக பைரவ மூர்த்தியின் ஆசீர்வாதத்தினால் சகல உலக போகங்களையும் பெற்றிடுவார்.

    இயற்கைச் சீற்றம், விலங்கு, பறவை, விஷப்பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப்படுவார் என்று பைரவ கல்டம் உரைக்கிறது.

    யோக பைரவக் கோட்டை எனும் பைரவர் யந்திர வர்ணணையைப் படித்தாலே அவர் புண்ணியக்கதை படித்த பலனால் நலம் அடையலாம்.

    • பொன் வண்ணத்தோடு அகன்ற கண்கள் கொண்ட மீன்கள் அவரிடம் உள்ள செல்வத்திற்கு பாதுகாப்பாளர்களாக உள்ளனர்.
    • வெளிவட்டத்தாமரைப் பொய்கை நடுவே 16 பவள மாளிகைகளில் பொன் பொருள், செல்வங்கள் குவிந்துள்ளன.

    பைரவ பூஜையைப் பற்றிச் சொன்னதும் அசிதாங்க பைரவர், குரு பைரவர், உன்மத்த பைரவர், ப்ரசண்ட பைரவர், சம்ஹார பைரவர், ஸ்வர்ணகெர்ஷண பைரவர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகின்றனர்.

    இவர்களில் அதிஷ்டங்களைத் தருகிற யோக பைரவரும் இடம் பெற்றுள்ளார்.

    இந்த யோக பைரவரின் சுற்று தேவதைகளை அறிந்து வணங்கினால் நமக்கு அவயோகங்கள் சுபயோகமாகி அதிஷ்ட யோகங்கள் உண்டாகும்.

    இவர் கற்பகச் சோலைகளுக்கு நடுவே பொங்கு பூம்பினல் நடுவில் உள்ள மகராலயத்தில் வீற்றுள்ளார்.

    மகரங்களால் தாங்கப்படுகிற பொன்மயமான கோட்டையில் சகல பரிவார தெய்வங்களோடு வெண்குதிரையில் இரட்டை வெண் குதிரையில் ஏறி இரு மீன்கள் பொறித்த கொடியோடு மச்ச முத்திரை தாங்கியவராக ஜொலிக்கிறார்.

    பொன் வண்ணத்தோடு அகன்ற கண்கள் கொண்ட மீன்கள் அவரிடம் உள்ள செல்வத்திற்கு பாதுகாப்பாளர்களாக உள்ளனர்.

    பாக்யேஸ்வரி, ஆனந்த வல்லி என்ற இரண்டு மனைவியர் அருகில் அமர்ந்திருக்க மீன் கொடி, நகுலம் என்ற கீரிப்பிள்ளை, சூலம், அமிர்த கலசம் ஆகியவற்றை ஆபரணங்கள் போல வைத்துக் கொண்டுள்ளார்.

    மகராலயம் என்ற அறுகோணக் கோட்டையின் ஆறு பக்க மூலைகளிலும் உப்பரிகை இட்டு உல்லாசச் சிரிப்புடன் உல்லாசினி, நிராகுலி, யோகினி, சல்லாபினி, ஹிதேஸ்வரி, விநோதினி ஆகிய ஆறு யோக சக்தி தேவிகள் உள்ளனர்.

    அடுத்ததாக எண் கோண வடிவக் கோட்டையில் அஷ்ட பைரவர்களும் வெளிவட்டத்தாமரைப் பொய்கை நடுவே 16 பவள மாளிகைகளில் பொன் பொருள், செல்வங்கள் குவிந்துள்ளன.

    அதனுள் 16 பேறுகளை வழங்கக் கூடிய 16 லட்சுமிகள் கொலு வீற்றிருக்கின்றனர்.

    இவர்களை அடுத்து உள்ள வனத்தில் 64 மாளிகைகளில் 64 யோகினியர்களுடன் 64 பைரவர்கள் அமர்ந்திருக்க உபதேவதை மற்றும் காவலர்களாய் வேதானர்கள் வீற்றுள்ளார்கள்.

    அடுத்ததாக உள்ள மூன்று வட்டங்களில் காடுகள் முதல் வட்டத்திலும் அகழி 2&ம் வட்டத்திலும் மலைகள் மூன்றாம் வட்டத்திலும் உள்ளன. இவற்றில் காட்டில் வனபாலகர்கள், அகழியில் தீர்த்த பாலகர்கள், மலைமேல் & சேத்திர பாலகர்கள் உள்ளனர். 

    • வடநாட்டில் காபாலிகர்கன் என்ற வகையினரும், காணமுகர்கள் என்ற இரு பிரிவினர்கள் வாழ்ந்து வந்தனர்.
    • சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் பைரவ பூஜை சில ஆலயங்களில் மட்டுமே நடைபெற்றது.

    வடநாட்டில் காபாலிகர்கன் என்ற வகையினரும், காணமுகர்கள் என்ற இரு பிரிவினர்கள் வாழ்ந்து வந்தனர்.

    சில காலங்கள் கழித்து இந்தியாவின் தென்னகப் பகுதிக்குள் நுழைந்து, ருத்திர பூமி எனப்படும் சுடுகாட்டில் நுழைந்து இவர்களது வழிபாட்டுக் கடவுளான பைரவரை வணங்கி மது மாமிச வகைகளைப் படைத்து வைதீக சாஸ்திர வழிபாட்டாளர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தனர்.

    இவைகளை ஈசனும் வெறுத்திட காபாலிகர்களும் கானமுகர்களும் அழிந்தனர்.

    பல்லவர் ஆட்சிக்கால மக்கள் இவர்களை வெறுத்து விட்டாலும் பைரவர் பற்றிய பயம் போகாமல் இருந்தது.

    சிவன் சொத்தை அபகரிப்பவர்களை பைரவர் தண்டிப்பார் என்ற நம்பிக்கை அப்போது நிலவியதால் பைரவர் பற்றிய பயம் குறையாத வேளையில் பைரவரின் 64 வடிவங்கள் பலன்கள் எடுத்துச் சொல்லப்பட்ட போது பெளத்தர்களும் சமணர்களுமே இவரை வழிபட்டனர்.

     சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் பைரவ பூஜை சில ஆலயங்களில் மட்டுமே நடைபெற்றது.

    இன்றோ தேய்பிறை அஷ்டமி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதோஷ கால நந்தி வழிபாடு போல பக்தர்கள் முன்னதாகவே ஆலய வழிபாட்டுக்குச் சென்று விடுகின்றனர்.

    பைரவ வழிபாட்டுக்கு உதவியாக ஆகாச பைரவ கல்வம், ருத்ரயாமனம் போன்ற நூற்கள் இவரை முறையாக வழிபடும் விதியைச் சொல்கிறது.

    • பைரவரை வழிபடும் சிவனடியார்களை அரசர்கள் இவர்கள் வலிமை அறிந்து துன்புறுத்த மாட்டார்கள்.
    • அவர்களும் அரசனுக்குப் பயப்படமாட்டார்கள்.

    ஐந்து இதன் தேவரகசியம் யாதெனில், ஐந்து எண்ணிக்கையில் சப்தமு கீருத்ராட்சத்தை வடக்கு முகமாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச உபசாரங்கள் செய்து யோக பைரவ மூல மந்திரத்தால் ஹோமம் செய்து கடையில் வைக்க வியாபாரத்தில் செழிப்பும் முன்னேற்றத் தகவல்களும் வரக்காணலாம்.

    இன்றைக்குச் சுமார் 1800 ஆண்டுகட்கு முன்பாக ஆதிசைவ சிவாச்சாரியார்கள் என்ற பிரிவினர் பலர் பைரவ ஆராதனையில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள்.

    அவர்கள் செய்த பைரவ உபாசனையின் பலனாகயாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமல் சைவக் கோவில்களைத் தன்னாட்சி அமைப்பு போன்றே நடத்தி வந்துள்ளனர்.

    பணத்தட்டுப்பாடு ஏற்படும் போது ஒரு செப்புத் தகட்டை எடுத்து யோக பைரவ ஸ்வர்ண பைரவ மந்திரத்தை ஜெபித்து பைரவரது பாதத்தில் வைத்து விட்டுச் செல்வர்.

    மறுநாள் கதவைத் திறந்து அந்த செப்புத்தகட்டைப் பார்த்தால் அது தங்கத் தடமாக மாறி இருக்கும்.

    அதைக் கொண்டு அவசரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வர் என்று காலச் செய்தி உள்ளது.

    பைரவரை வழிபடும் சிவனடியார்களை அரசர்கள் இவர்கள் வலிமை அறிந்து துன்புறுத்த மாட்டார்கள்.

    அவர்களும் அரசனுக்குப் பயப்படமாட்டார்கள்.

    • கேரள தேசத்தில் லிங்காயத்துகள் போலவே தமிழகத்தில் பைரவ உபாசகர்கள், பக்தர்கள் திரளாக இருக்கின்றனர்.
    • இவர்களில் பொற்கொல்வர்களும், நகை வியாபாரம் செய்பவர்களுமே அதிகம் உள்ளனர்.

    ஆறுமாதத்தில் தொடங்கி ஐந்து வயது முடியும்வரை குழந்தைகளின் இடுப்பில் அரைஞான் கயிறு அணிவிக்கப்படுகிற போது, தாயத்து மணியுடன் சேர்த்து நாய்க்காசு என்று ஒரு பொன் காசைச் சேர்த்து அணிவிப்பது வழக்கமாக இருந்தது.

    குழந்தை வழிதவறிச் சென்று விட்டால் இக்காசுகளில் வாசம் செய்கிற தெய்வம் துணை இருக்கும் என நம்பிக்கை.

    வெள்ளி, தங்கத்தால் செய்யப்பட்ட இக்காசுகளில் அழகான நாய் உருவம் இடம் பெறுவதைக் காணும் போது வேட்டை செய்யும் சமுதாயமாக ஆதி மனிதன் வாழ்ந்த காலத்திலிருந்தே நாய் உருவ பைரவர் வாழ்க்கையைப் பாதுகாத்து வரும் கடவுள் என்று அறிகிறோம்.

    மன்னர்கள் தங்களது அரசாங்க முத்திரைகளில் நாய் உருவம் பதித்தது போன்றே பைரவரின் பக்தர்கள் வழிபாட்டுக்குக் கொடி, டாலர்களில் நாய் உருவத்தைப் பதித்து வழிபட்டு வந்தனர்.

    பைரவ மூர்த்தி வகைகளில் யோக பைரவரை பூஜித்துப் பலன் அடைந்தவர்களின் கால வரலாற்றை அறிந்தால் பைரவர் பயம் போக்கி பாதுகாப்பு தந்து பணபலமும், மனபலமும் சேர்ப்பவர் என்று அறிவீர்கள்.

    கேரள தேசத்தில் லிங்காயத்துகள் போலவே தமிழகத்தில் பைரவ உபாசகர்கள், பக்தர்கள் திரளாக இருக்கின்றனர்.

    இவர்களில் பொற்கொல்வர்களும், நகை வியாபாரம் செய்பவர்களுமே அதிகம் உள்ளனர்.

    பொதுவாக நகைக்கடை வைத்திருப்பவர்கள் யோக பைரவரை வழிபடுவதால் மக்களின் போக்குவரத்தும், வாடிக்கையாளர் ஈர்ப்பும், நகைகள் சேர்ந்து வியாபார குவிதலும் ஏற்படும்.

    • இவருக்கு ஸ்வர்ண பைரவர் சௌபாக்ய பைரவர் என்ற பெயர்களும் உண்டு.
    • நரம்பு தொடர்பான நோய்கள் விலகும் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.

    பைரவ மூர்த்தியை மகிழ்ச்சிப்படுத்தி வரம்பெற அவரது விசேட மூர்த்தமாக விளங்கும் ஸ்ரீயோக பைரவரை முறையோடு வழிபட வேண்டும்.

    இவருக்கு ஸ்வர்ண பைரவர் சௌபாக்ய பைரவர் என்ற பெயர்களும் உண்டு.

    சிவாலய மூர்த்தியான பைரவக் கடவுளை வழிபட விதிகளைக் கூறும் நூல்களாக, மூர்த்தி தியானம், ஸ்ரீபரார்த்த பூஜா விதிகள், பராக்கிய நூல், விஷ்ணு தர்மோத்தரம், சித்திரதர்மம், அம்சுமத் ஆசுமம் ஆகியவனவும், உபநூல்களாக பைரவரின் அருளும் தன்மைகளைக் குறித்துப் பலவகைகளாக வெளிவந்துள்ளன.

    ஸ்ரீபைரவ மூர்த்தியை அஷ்டமி, அமாவாசை தினங்களில் தேனாபிஷேகம் செய்து தயிரன்னம், கடலை சுண்டல், வடை, தேங்காய், பழம் வெற்றிலை தாம்பூலம் வைத்து வழிபட காரியசித்தி உண்டாகும்.

     நரம்பு தொடர்பான நோய்கள் விலகும் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.

    ஆனால், விசேட மூர்த்தியான யோக பைரவரை வழிபட்டால் பொருளாதார வளமும், வாழ்க்கைப் பாதுகாப்பும் கிடைக்கும் என்று வழிபட்டு வாழ்ந்து அனுபவித்த பெரியோர்கள் குறிப்பிட்டனர்.

    • ஈசனின் அம்சங்களில் ஒருவரான ஸ்ரீபைரவ மூர்த்தியை சிவகணங்கன் வரிசையில் திருத்தலத்தின் காவலர் என்று புகழ்வார்கள்
    • பைரவரை வழிபட்டவர்கள் பல யோகங்களைப் பெற்றிருக்கின்றனர்.

    பைரவர் என்றால் எல்லோருக்குமே அவர் ஒரு உக்ரமான தெய்வம் என்றும், நன்மை செய்வாரா மாட்டாரா என்றும் ஒருவித பயம் உண்டாகலாம்.

    ஆனால் பைரவரை வழிபட்டவர்கள் பல யோகங்களைப் பெற்றிருக்கின்றனர்.

    மக்களைக் காப்பதற்காக சிவபெருமான் எடுத்த வடிவங்களில மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு வழிபடும் மூர்த்தங்களாக, ஒன்பது உள்ளன.

    அவைதான் சிவலிங்கம், லிங்கோத்பவர், சந்திர சேகரர், சோமாஸ்கந்தர், பைரவர், வீரபத்திரர், நிருத்த மூர்த்தி, தட்சிணா மூர்த்தி, பிட்சாடனர் ஆகியோர்.

    ஈசனின் அம்சங்களில் ஒருவரான ஸ்ரீபைரவ மூர்த்தியைச் சிவகணங்கன் வரிசையில் திருத்தலத்தின் காவலர் என்று புகழ்வார்கள்,

    சிவாலயங்களில் அர்த்தசாம பூஜை முடிந்த பிறகு ஆலயத்தைப் பூட்டி சாவியை பைரவர் முன்பு வைத்து விட்டால் இரவு முழுவதும் பாதுகாப்பார்.

    திருட்டுப் போகாது என்பது நம்பிக்கையாக இருந்து வந்தது.

    ×