search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலகக்கோப்பை தொடர்- இந்திய அணிக்கு யோசனை கூறிய ரவி சாஸ்திரி
    X

    ரவி சாஸ்திரி

    டி20 உலகக்கோப்பை தொடர்- இந்திய அணிக்கு யோசனை கூறிய ரவி சாஸ்திரி

    • இந்திய அணி முழுமையான பலம் கொண்ட வீரர்களை பெற்றுள்ளது என எனக்கு தோன்றுகிறது.
    • அரையிறுதிக்கு சென்றுவிட்டால் கோப்பையை சுலபமாக வெல்லலாம் என்பது எனது நம்பிக்கை.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.இந்த தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த 6-ம் தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.

    இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக உள்ள போதும், பந்துவீச்சு தான் கவலையளித்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் முதுகெலும்பாக பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் உலகக்கோப்பையை எதிர்கொள்ள ரவிசாஸ்திரி முக்கிய யோசனை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பும்ரா இல்லாதது துரதிஷ்டவசமானது தான். அதிகப்படியான போட்டிகளில் விளையாடியதால் காயம் ஏற்பட்டுவிட்டது. இதில் இனி கவலைக்கொண்டு எந்தவித பயனும் இல்லை. எனவே இதனை மற்றொருவருக்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு நகர வேண்டும்.

    இந்திய அணி முழுமையான பலம் கொண்ட வீரர்களை பெற்றுள்ளது என எனக்கு தோன்றுகிறது. அரையிறுதிக்கு சென்றுவிட்டால் கோப்பையை சுலபமாக வெல்லலாம் என்பது எனது நம்பிக்கை. எனவே தொடக்கத்தையும், லீக் சுற்றையும் சிறப்பாக விளையாட வேண்டும். பும்ரா இல்லை, ஜடேஜா இல்லை என யோசிக்காமல் இருக்கும் அணியிடம் பெரும் நம்பிக்கையுடன் களமிறங்க வேண்டும். புதிய சரித்திரம் படைக்க வேண்டும் என நினைக்க வேண்டும்.

    இவ்வாறு சாஸ்திரி கூறியுள்ளார்.

    தற்போது பெர்த் நகரத்திற்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணிகளுடன் பயிற்சி பெறவுள்ளது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியுடனும், நியூசிலாந்துடனும் பயிற்சி போட்டிகளில் மோதவுள்ளது. இவை முடிந்தவுடன் வரும் அக்டோபர் 23-ம் தேதியன்று முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

    Next Story
    ×