search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பெண்கள் ஆசிய கோப்பை: இந்திய அணிக்கு 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
    X

    பெண்கள் ஆசிய கோப்பை: இந்திய அணிக்கு 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்

    • இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
    • பாகிஸ்தான் அணியின் நிதா தார் அரை சதம் அடித்தார்.

    சில்கெட்:

    சில்கெட்டில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள் அணி 33 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் திணறியது.

    அதனையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மரூப் - நிதா தார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிகப்பட்சமாக நிதா தார் அரை சதம் அடித்தார். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்தது.

    இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    Next Story
    ×