search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஷெல்டன் ஜாக்சன் அதிரடி- விஜய் ஹசாரே கோப்பையை வென்றது சவுராஷ்டிரா
    X

    ஷெல்டன் ஜாக்சன் 

    ஷெல்டன் ஜாக்சன் அதிரடி- விஜய் ஹசாரே கோப்பையை வென்றது சவுராஷ்டிரா

    • மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் குவித்தார்.
    • சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா - மகாராஷ்டிரா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் விளையாடிய மகாராஷ்டிரா அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 108 ரன்கள் குவித்தார்.

    அசிம் காசி 37 ரன்னும், சத்யஜீத் பச்சாவ் 27 ரன்னும் அடித்தனர். நவ்ஷாத் ஷேக் 31 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். 50 ஓவர் முடிவில் மகாராஷ்டிரா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை குவித்தது.

    இதையடுத்து 249 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சவுராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் அரை சதம் அடித்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் ஷெல்டன் ஜாக்சன் 133 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதில் 12 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். சிராக் ஜானி 30 ரன்கள் அடித்தார். இதையடுத்து 46.3 ஓவர் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்து வெற்றி பெற்றதுடன் விஜய் ஹசாரே கோப்பையை 2வது முறையாக தட்டிச் சென்றது.

    Next Story
    ×