search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    பாதக தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகளும்... பரிகாரமும்...
    X

    பாதக தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகளும்... பரிகாரமும்...

    • ஒருவருடைய ஜாதகத்தில் பாதகாதிபதி வலுப்பெறவே கூடாது.
    • பாதகாதிபதி சுபருடன் சேர்ந்தால் சுபத்தை கட்டுப்படுத்துவார்.
    • பாதகாதிபதிகள் அசுப வலிமை பெற்று எந்த பாவத்தில் நின்றாலும் சுப பலன் கிட்டாது.

    ஒருவரின் ஜாதகத்தில் பாதகாதிபதி அமர்ந்த நிலையே பல பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அமைகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் பாதகாதிபதி வலுப்பெறவே கூடாது. பாதகாதிபதி சுபருடன் சேர்ந்தால் சுபத்தை கட்டுப்படுத்துவார். அசுபர்களுடன் சேர்ந்தால் அசுபத்தை மிகுதிப்படுத்துபவார். பாதகாதிபதிகள் அசுப வலிமை பெற்று எந்த பாவத்தில் நின்றாலும் சுப பலன் கிட்டாது. பாதகாதிபதி சுப வலிமை பெற்றால் தசையின் ஆரம்பத்தில் அனைத்து சுப பலன்களையும் நடத்தி, தசையின் முடிவில் பெரும் பாதகத்தை செய்வார். பாதகாதிபதியின் தசை அல்லது பாதகத்தில் நின்ற கிரகத்தின் தசை நடந்து மரணம் அல்லது மரணத்துக்கு நிகரான துன்பம் இரண்டில் ஒன்றை வலுப் பெற்ற பாதகாதிபதி தசை நிச்சயம் செய்யும். கிரகங்களின் நகர்வின் அடிப்படையில் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்து இருக்கிறார்கள்.

    பாதகாதிபதி என்ற பெயரே பாதகாதிபதி, பாதகஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் நடத்தும் பாதகம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும்.அதே போல் பாதகாதிபதிகள் வாழ்நாள் முழுவதும் பாதகத்தை தந்து கொண்டே இருக்க மாட்டார்கள். பாதகம் வேலை செய்யும் காலகட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

    பாதகாதிபதியால் நன்மை நடைபெற வேண்டுமெனில் பாதகாதிபதி நீசம்,அஸ்தங்கம் பெற்று பலம் குறைய வேண்டும். ஜாதகத்தில் லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்றவர்களை பாதக தோஷம் பெரியதாக பாதிக்காது. பாதகாதிபதிக்கு, பாதக ஸதானத்திற்கு அல்லது பாதகத்தில் நின்று தசை நடத்தும் கிரகத்திற்கு குரு பார்வை அல்லது லக்ன சுபரின் பார்வை இருந்தால் ஜாதகரை பாதக தோஷம் பாதிப்பதில்லை.

    பெரும்பான்மையாக பாதகாதிபதி, பாதகாதிபதியின் நட்சத்திர சாரம் மற்றும் பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகத்தின் தசை,புத்தி காலங்களில் மட்டுமே பாதிப்பு இருக்கும். மற்ற காலங்களில் பாதிப்பு இருக்காது. பாதகாதிபதிகள் தனது தசாபுத்தி காலங்களில் நன்மை செய்யும் வாய்ப்பு குறைவு. முதலில் சாதகமாக இருந்தால் முடிவில் பாதகத்தையே தரும் அல்லது பாதகமும் சாதகமும் கலந்தே இருக்கும்.

    ஜனன ஜாதகத்தில் பாதகாதிபதி மற்றும் பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகங்களுக்கு ஜனன மற்றும் கோட்சார சனி, ராகு/கேதுக்களின் சம்பந்தம் ஏற்படும் போது அசுப விளைவுகள் ஜாதகரை நிதானமிலக்கச் செய்யும். பாதகாதிபதி உச்சம் பெறக் கூடாது. பாதகாதிபதி அல்லது பாதக ஸ்தானத்தில் நிற்கும் கிரகம் சுய சாரம் பெறக்கூடாது.. ஜனன,கோட்சார ரீதியாக அஷ்டமாதிபதி ,பாதகாதிபதி இணைவு ஏற்படும் காலங்களில் பாதிப்பு இருக்கும். குரு பார்வைக்கு பாதகத்தை மட்டுப்படுத்தும் சக்தி உண்டு. இது போன்ற பாதிப்பை சந்திப்பவர்கள் பரிந்துரைத்துள்ள பரிகாரத்தை கடைபிடித்து வர பாதகம் நீங்கி சாதகம் கிடைக்கும்.

    பரிகாரம்

    பொதுவாக பாதகாதிபதியின் தசை, புத்தி அந்தர காலங்களில் அனுபவ அறிவு, தன்னைத்தானே உணரும் சக்தியையும் அதிகரிக்க யோகாசனம் மிக அவசியம். கல் உப்பு இட்ட நீரில் குளித்து வர எதிர்மறை ஆற்றல் மட்டுப்படும். பாதக தோஷத்தால் மிகுதியான அசுப பலனை அனுபவிப்பவர்கள் தினமும் ஆஞ்சநேயர் கோவில் செந்தூரத்தை நெற்றியில் இட்டு வந்தால் சுப பலன் கிடைக்கும். வெள்ளியிலான ஆபரணத்தை உடலில் அணிய எதிர்மறை சிந்தனை குறைந்து சிந்தித்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். ஜென்ம நட்சத்திர நாளில் துர்க்கை, காளி மற்றும் பிரத்யங்கரா தேவி போன்ற உக்ர தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடவும். சரம்: மேஷம்,கடகம்,துலாம், மகரம் லக்னங்களுக்கான பரிகாரம். தினமும் வில்வாஷ்டகம் படித்து வர தொழிலில் லாபம் பெருகும். வீண் விரயத்தை தவிர்க்க ஆதரவற்றவர்களுக்கு இயன்ற தானம் தர வேண்டும். நேரம் கிடைக்கும் போது கோவில்களில் உலவாரப் பணிகளை செய்ய வேண்டும். உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். சனிக்கிழமைகளில் கருவேப்பிலை சட்னி சாப்பிட வேண்டும்.

    ஸ்திரம்: ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் லக்னங்களுக்கான பரிகாரம்.

    வயது முதிர்ந்த அந்தணர்களுக்கு உணவு,உடை தானம் தந்து காலில் விழுந்து நல்லாசி பெற வேண்டும்.

    ஜென்ம நட்சத்திர நாளில் ஆன்மீகப் பெரியோர்கள்,மத குருமார்களின் நல்லாசி பெற வேண்டும்.

    கோ தானம் செய்ய பல தலைமுறையாக தீராத பித்ரு சாபம் தீரும்.

    சனிக்கிழமை காக்கைக்கு எள்ளு சாதம் வைக்க வேண்டும்.

    உபயம்: மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னங்களுக்கான பரிகாரம்.

    பாதகாதிபத்திய தோஷத்தால் திருமணத்தடை, திருமண வாழ்வில் உள்ள பிரச்சினைகளை நீங்க செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று விரதமிருந்து சிவபெருமானையும், நந்தியையும் வழிபடுவதுடன் உளுந்து சுண்டல் தானம் தர வேண்டும்.

    தொடர்ந்து பன்னிரன்டு பவுர்ணமிக்கு கிரிவலம் வர வேண்டும்.

    வாழும் ஊரின் சிறப்பு வாய்ந்த அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து ஆறு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    Next Story
    ×