search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சேவூர்சக்தி மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது
    X

    சேவூர் சக்தி மாரியம்மன் கோவிலையும், சக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும் காணலாம்.

    சேவூர்சக்தி மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது

    • நாளை பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள சேவூர் சக்தி மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் பங்குனி திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கம்பம் நடுதல் மற்றும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதையடுத்து தினசரி காலை, இரவு நேரங்களில், சாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், அதைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகளும் நடைபெற்றது. தினசரி காலை 8 மணிக்கு பூவோடு எடுத்தல், இரவு நேர பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தினசரி இரவு பெரியவர்கள், இளைஞர்கள் கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணிக்கு அம்மை அழைத்தல், காலை 6 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சேவூரில் உள்ள ராஜவீதி, கோபி மெயின் ரோடு, வடக்கு வீதி, ஐஸ்கடைவீதி, தெற்கு சேவூர் மற்றும் ராக்கம்பாளையம் பொதுமக்கள் என சுமார் 750-க்கும் மேற்பட்டோர் மாவிளக்கு எடுத்து வந்து சக்தி மாரியம்மனை வழிபடுகிறார்கள்.

    அதையடுத்து காலை 9 மணிக்கு, பூவோடு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இரவு 7 மணிக்கு கம்பம் களைதல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள், (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில், நாளை பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்படும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×