என் மலர்
வழிபாடு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் 5-ந்தேதி தெப்ப உற்சவம்
- இந்த கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
- இந்த கோவிலில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள மலையின் மீது பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இதன் அடிவாரத்தில் பக்தவச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
தைப்பூச நாளன்று இந்த கோவிலில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச நாளான வருகிற 5-ந்தேதி சன்னதிதெருவில் உள்ள சங்கு தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
மறுநாள் (6-ந்தேதி) பக்த வச்சலேஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ரிஷப தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதில், உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். தெப்ப உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்
Next Story