என் மலர்

    கால்பந்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது.
    • இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்றது. இருந்தது.

    ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 முதல் நடைபெற்று வருகிறது. இதனை ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது.

    நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டுகள் ஓலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது.

    இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகின்றன.

    ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

    இதில் கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 21 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

    'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்றது. இருந்தது.

    இந்த நிலையில் இன்று நடைபெறும் 2-வது லீக்கில் இந்திய அணி, வங்காளதேசத்துடன் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களம் காணுகிறது.

    கால்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் கலந்து கொண்டுள்ள 16 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று சீன தைபேயை மாலை 5 மணிக்கு சந்திக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது
    • 2-வது பாதி ஆட்டத்தில் நைஸ் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது

    பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து தொடர் லீக்-1. இதில் முன்னணி அணியாக பிஎஸ்ஜி திகழ்ந்து வருகிறது. இந்த அணியில் இருந்து மெஸ்சி, நெய்மர் ஆகியோர் வெளியேறிவிட்டனர். நட்சத்திர வீரர் எம்பாப்வே அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்திய நேரப்படி இன்று காலை பிஎஸ்ஜி அணி நைஸ் அணியை எதிர்கொண்டது. இதில் எம்பாப்பே இரண்டு கோல்கள் அடித்த போதிலும், 2-3 என நைஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

    ஆட்டம் தொடங்கிய 21-வது நிமிடத்தில் நைஸ் அணியின் டெரெம் மொஃப்பி கோல் அடித்தார். இதற்கு எம்பாப்வே 29-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 சமனில் இருந்தது.

    2-வது பாதி நேரத்தில் நைஸ் வீரர்கள் அபாரமாக விளையாடினர். 53-வது நிமிடத்தில் கயேடன் லபோர்டேவும், 68-வது நிமிடத்தில் மொஃப்பியும் கோல் அடித்தனர். இதனால் நைஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் பிஎஸ்ஜி அணியால் கோல் அடிக்க முயற்சித்தது. ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆனால், அதன்பின் பிஎஸ்ஜி அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்காரணமாக பிஎஸ்ஜி 2-3 எனத் தோல்வியை சந்தித்தது.

    இந்தத் தோல்வியால் பிஎஸ்ஜி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது. மொனாக்கோ முதல் இடத்திலும், நைஸ் 2-வது இடத்திலும் உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
    • உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.

    பிரேசிலியா:

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்துக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரேசில் வீரர் மார்கினோஸ் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.

    இந்த ஆட்டத்திற்கு முன்னதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பெரு நாட்டு மாந்திரீகர்கள் தங்கள் நாட்டின் வெற்றிக்காக ஆசீர்வாதங்களைக் கோரி, சடங்குகள் செய்து பிரார்த்தனை செய்தனர். இதில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஆட்டத்தை மாற்றும் திறமை கொண்டவர் என்பதால் அவர் கோல் அடிப்பதைத் தடுக்க தனித்துவமான சடங்குகளைச் செய்தனர்.

    நெய்மர் படத்தின் மீது பழுப்பு நிற துணியை போர்த்தி, அவரது இடது காலை கட்டி, வலது காலின் மேல் ஒரு வாளை வைத்து வழிபாடு செய்தனர். எனினும்,பெருவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் நெய்மர் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.

    நெய்மர் படத்தை வைத்து சடங்குகள் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சில முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை.
    • ஜோதிடர் சொன்னபடி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம்.

    மும்பை:

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய வீரர்களின் திறமையை பரிசீலிக்காமல், ஜோதிடரை அணுகி வீரர்களின் ராசி பலன்களை பார்த்து தேர்வு செய்தது தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் இந்திய அணி விளையாடிய போது இந்திய கால்பந்து சங்கத்தின் அதிகாரி ஒருவரின் மூலம் ஜோதிடரை, அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அணுகியிருக்கிறார். அந்த தகுதிச்சுற்றின் ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பாகவும் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம், எந்தெந்த வீரர்கள் எப்படி ஆடுவார்கள் என அணியின் விவரங்கள் அத்தனையையும் ஜோதிடரிடம் கொடுத்தே இகோர் ஸ்டிமாக் ஆலோசனை பெற்றிருக்கிறார்.

    கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங்11 பட்டியலை 2 நாள்களுக்கு முன்னதாகவே ஜோதிடருக்கு பயிற்சியாளர் அனுப்பியுள்ளார்.

    ஒவ்வொரு வீரரின் நட்சத்திரத்தை ஆராய்ந்து , இவர் இன்று நன்றாக விளையாடுவார். இவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பயிற்சியாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த ஆட்டத்தில் சில முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. ஏனென்றால் அன்றைய தினம் அவர்களது நட்சத்திரங்கள் சாதகமாக இல்லை என்று ஜோதிடர் கூறியது தான் காரணம்.

    மேலும் ஜோதிடர் சொன்னபடி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம். மேலும், இந்திய அணிக்காக ஆலோசனை வழங்கியதற்காக அந்த ஜோதிடருக்கு ரூ. 15 லட்சம் சன்மானமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த விசயம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்து இருந்தனர்.
    • ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்-க்கு 90 நாட்களுக்கு தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டு இருந்தது.

    மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது. லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.

    இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்து இருந்தனர். இந்த சம்பவம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய அடுத்து, ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்-க்கு 90 நாட்களுக்கு தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டு இருந்தது.

    இந்நிலையில், ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
    • 2026 உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகியவை நடத்துகின்றன.

    சாபாவ்லோ:

    உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது.

    வரும் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது. இதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில், பொலிவியா அணிகள் மோதின. இதில் பிரேசில் 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    இதில் நட்சத்திர வீரர் நெய்மர் 61 மற்றும் 93-வது நிமிடத்தில் என 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் பீலேயின் சாதனையை நெய்மர் முறியடித்தார்.

    மறைந்த பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே சர்வதேச போட்டிகளில் 77 கோல்கள் அடித்து இருந்தார். 1957 முதல் 1971 வரையிலான காலகட்டத்தில் 92 போட்டிகளில் இந்த கோல்களை அடித்தார்.

    அவரது சாதனையை நெய்மர் ஏற்கனவே சமன் செய்தார். தற்போது அடித்த 2 கோல்கள் மூலம் பீலேயின் சாதனையை அவர் முறியடித்தார்.

    31 வயதான நெய்மர் 125 சர்வதேச போட்டியில் விளையாடி 79 கோல்கள் அடித்துள்ளார். இதன்மூலம் அதிக கோல்கள் அடித்துள்ள பிரேசில் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    சர்வதேச அளவில் அதிக கோல்களை அடித்த வீரர்களில் நெய்மர் 9-வது இடத்தில் உள்ளார். அவர் 2010 முதல் சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்) 123 கோல் அடித்து (200 போட்டி) முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சி (அமெரிக்கா) 103 கோல்களுடன் (175 ஆட்டம்) 3-வது இடத்தில் உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வயலட்டா மிதுல் தமது தேசிய அணிக்காக 40 முறை களமிறங்கியுள்ளார்.
    • 26 வயதேயான வயலட்டா மிதுல் ஐரோப்பாவின் பல நாடுகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் முக்கிய வீரரான வயலட்டா மிதுல் விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் மொத்த கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனையான 26 வயது வயலட்டா மிதுல் தமது தேசிய அணிக்காக 40 முறை களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் 4-ம் திகதி தமது சக கால்பந்து வீராங்கனை ஒருவருடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டவர் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

    அவரது மரணம் தொடர்பில் கால்பந்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் வீரர், சக வீரர் மற்றும் நண்பரின் திடீர் மரணத்தை எங்கள் இதயங்களில் ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

    26 வயதேயான வயலட்டா மிதுல் ஐரோப்பாவின் பல நாடுகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 5 முறை இந்த விருதை ரொனால்டோ பெற்றுள்ளார்.
    • ரொனால்டோ முதல் முறையாக 2008-ம் ஆண்டு இந்த விருதை பெற்றார்.

    வருடம் வருடம் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பலோன் டி ஓர் விருதை பிபா வழங்கி வருகிறது. 1956 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை வாங்குவதில் 2007-ம் ஆண்டு முதல் மெஸ்சி மற்றும் ரொனால்டோவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களில் 60 (30 ஆண் மற்றும் பெண்) பேர் இடம் பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்ல உதவுவதில் முக்கிய பங்கு வகித்த லியோனல் மெஸ்ஸி இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். மேலும் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் இந்த பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவராக உள்ளனர்.

    இதில் போர்ச்சுகல் ஜாம்பவான் மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர் பரிந்துரை பட்டியலில் இடம் பெறவில்லை. 5 முறை இந்த விருதை பெற்றுள்ள அவர் பெயர் இடம் பெறாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ரொனால்டோ முதல் முறையாக 2008-ம் ஆண்டு இந்த விருதை பெற்றார். அதனை தொடர்ந்து 2013, 2014, 2016, 2017 என கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவர் பதவி விலகியதாக நேற்று செய்திகள் பரவின.
    • மன்னிப்பு கேட்ட போதிலும் பதவி விலக மாட்டேன் என அவர் தெரிவித்திருந்தார்.

    மகளிர் உலக கால்பந்து போட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடந்தது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

    மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது.

    லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.

    இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். அவர் கூறும்போது, நான் கண்டிப்பாக தவறு செய்து விட்டேன். இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து அவர் பதவி விலகியதாக செய்திகள் வந்தன. இதனையடுத்து அந்த செய்தி பொய் எனவும் ராஜினாமா செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்துள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நான் கண்டிப்பாக தவறு செய்து விட்டேன். இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.
    • இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

    மகளிர் உலக கால்பந்து போட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடந்தது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

    மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது ஸ்பெயின் வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவை கட்டியணைத்து உதட்டில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது. லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.

    இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். அவர் கூறும்போது, நான் கண்டிப்பாக தவறு செய்து விட்டேன். இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கி உள்ளது. மேலும் லூயிஸ் ரூபியேல்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டு அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் லூயிஸ் ரூபியேல்ஸ் தனது ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என செய்திகள் பரவின. இதற்கு அவர் நான் ராஜினாமா செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print