என் மலர்

    சமையல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த கஞ்சியை செய்வது மிகவும் சுலபம்.
    • இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்

    வறுத்த சிறு பருப்பு - 1 கப்

    எலும்பில்லாத மட்டன் - அரை கிலோ

    பெ.வெங்காயம் - 3 (நறுக்கவும்)

    கேரட் - 4 (நறுக்கவும்)

    உருளைக்கிழங்கு - 2 (நறுக்கவும்)

    பட்டாணி - சிறிதளவு

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    மசாலா தூள் - தேவைக்கு

    மிளகாய் தூள் - தேவையான அளவு

    தக்காளி - 4 (நறுக்கவும்)

    பட்டை, ஏலக்காய் - சிறிதளவு

    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

    செய்முறை:

    அரிசியை சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் மட்டன், மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

    நன்கு வெந்ததும் குக்கரை திறந்து அரிசி, பருப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அரைத்துவைத்த கலவையில் சேர்க்கவும்.

    பின்னர் அதனை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.

    சுவையான மட்டன் கஞ்சி ரெடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • அதிக சத்துக்கள் நிறைந்த இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுபலம்.

    தேவையான பொருட்கள்

    சிவப்பு அவல் - 1 கப்

    உப்பு - 1 சிட்டிகை

    தண்ணீர் - 2 கப்

    கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - முக்கால் கப்

    தேங்காய் துருவல் - முக்கால் கப்

    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

    செய்முறை

    சிவப்பு அவலை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துகொள்ளவும்.

    2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்கவிடவும்.

    பொடித்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கொதிக்க வைத்த நீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இப்போது அவல் நன்றாக ஊறி இருக்கும்.

    அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    அடுத்து இட்லி தட்டில் ஊறவைத்த சிவப்பு அவலை பரப்பி விட்டு 7 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்.

    வேக வைத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு (அவல் சூடாக இருக்கும் போதே) அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பு அவல் புட்டு ரெடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
    • இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 150 கிராம்

    வெங்காயம் - 150 கிராம்

    தக்காளி - 2

    துருவிய தேங்காய் - 4 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - சிறிய துண்டு

    கொத்தமல்லித் தழை - சிறிது

    கறிவேப்பிலை - சிறிது

    இனிப்பில்லாத கோவா - 100 கிராம்

    பால் - 20 மில்லி

    பன்னீர் - 60 கிராம்

    குங்குமப்பூ - 1 கிராம்

    சோளமாவு - 1 தேக்கரண்டி

    மைதா மாவு - 1 மேசைக்கரண்டி

    திராட்சை 20 கிராம்

    முந்திரி - 20 கிராம்

    பாதாம் பருப்பு - 20 கிராம்

    தனியா - 2 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    கசகசா - 1 தேக்கரண்டி

    காய்ந்த மிளகாய் - 4

    ஏலக்காய் - 2

    கிராம்பு - 4

    பட்டை - 2

    எண்ணெய் - தேவைக்கேற்ப

    பிரெஷ் கிரீம் - 40 கிராம்

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:

    உருளைக்கிழங்கை மசித்துகொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் காய்ச்சிய பாலை ஊற்றி அதில் குங்குமப்பூவைக் கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, பன்னீர், கோவா, சோள மாவு, மைதா மாவு, திராட்சை, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு இவை எல்லாவற்றையும் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    மிக்சி ஜாரில் நறுக்கிய வெங்காயம், முந்திரி, பாதாம், தனியா, கசகசா, சீரகம், துருவிய தேங்காய், இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், ஏலக்காய், கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை, 70 மில்லி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பின்பு அதில் தக்காளி விழுது சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றவும்.

    கலவை கொதித்து வரும்போது அதில் பிரெஷ் கிரீம் சேர்க்கவும்.

    10 நிமிடங்கள் கழித்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் பதத்தில், பொரித்த உருண்டைகளை அதில் போடவும்.

    சிறிது நேரம் கழித்து அதன் மேல் கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும்.

    'நவாபி கோப்தா கறி' ரெடி.

    இதை சப்பாத்தி, தோசை, இட்லி அல்லது பரோட்டாவுடன் சேர்த்து பரிமாறலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதை டிபனாகவும், ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
    • சிவப்பரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - ஒரு கப்,

    உளுந்து - அரை கப்,

    வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,

    வெங்காயம் - ஒன்று,

    பச்சை மிளகாய் - 2,

    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து - வெந்தயத்தை தனியாகவும் 3 மணிநேரம் ஊறவிடவும்.

    நன்றாக ஊறியதும் இரண்டையும் அரைத்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி, 4 மணி நேரம் புளிக்கவிடவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, மாவில் சேர்க்கவும்.

    குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சிவப்பு அரிசி காரப் பணியாரம் ரெடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிக்கனில் விதவிதமான ஸ்நாக்ஸ் செய்யலாம்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2

    எலும்பில்லாத சிக்கன் - 1 கப்

    நெய் - 1 டீஸ்பூன்

    முட்டை - 2

    சில்லி பிளேக்ஸ் - 1 டீஸ்பூன்

    சாட் மசாலா - 1 டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    ஆரிகானோ - 1 டீஸ்பூன்

    பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1 டீஸ்பூன்

    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டீஸ்பூன்

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கபாப் ஸ்டிக் - 10

    உப்பு - சுவைக்கு

    பிரெட் துள் - தேவைக்கு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    சிக்கனை வேக வைத்து உதிர்த்து கொள்ளவும்.

    முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வேக வைத்து உரித்த சிக்கன், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், ஆரிகானோ, தனி மிளகாய் தூள், சாட் மசாலா, சில்லி பிளேக்ஸ், நெய் சேர்த்து நன்றாக பிசைத்த பின்னர் கடைசியாக 2 டீஸ்பூன் பிரெட் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

    ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி பரப்பி வைக்கவும்.

    2 கபாப் ஸ்டிக்கை எடுத்து கொண்டு அதில் சிக்கன் மசாலாவை ஒரு உருண்டை அளவு எடுத்து கபாப் ஸ்டிக்கில் வைத்து தட்டையாக தட்டவும். இவ்வாறு அனைத்து மசாலாவையும் செய்யவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த ஸ்டிக்கை முட்டை கலவையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் ஸ்டிக் ரெடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது.
    • இதை ஸ்நாக்ஸ் அல்லது டிபன் போன்று சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 1 கப்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

    காய்ந்த மிளகாய் - 3

    பச்சை மிளகாய் - 2

    கறிவேப்பிலை - 1 கொத்து

    தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    பின்னர் இவற்றை அரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    சூடாக இருக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவை கிண்டிக் கொண்டே வர வேண்டும். இதனால் நன்றாக மாவு வெந்து வரும். பின்னர் உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

    இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    இட்லி தட்டில் ஒரு காட்டன் துணியை விரித்து அதன் மேல் இந்த உருண்டைகளை வைத்து இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.

    மிருதுவான ஆரோக்கியம் மிகுந்த கார உப்பு உருண்டை தயாராகி இருக்கும்.

    கட்டாயம் மாவில் சுடு தண்ணீர் மட்டுமே ஊற்ற வேண்டும். அப்போது தான் மாவு மிருதுவான உருண்டையாக நமக்கு வரும். இல்லையென்றால் மாவு கெட்டியாக கடிப்பதற்கு சிரமப்படும் அளவிற்கு வந்து விடும். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னி வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 200 கிராம்

    உருளைக்கிழங்கு - 2

    ப.மிளகாய் - 2

    உப்பு - சுவைக்கு

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மிளகு தூள் - அரை டீஸ்பூன்

    சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    மலாய் அல்லது கிரீம் - 2 டீஸ்பூன்

    பிரெட் தூள் - தேவையான அளவு

    முட்டை - 2

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி சிறிது உப்பு, சில்லி பிளேக்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    குக்கரில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 1 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை எடுத்து விட்டு அதில் தண்ணீர் வற்றும் வரை சிக்கனை அடுப்பில் வைத்து வேக விடவும்.

    தண்ணீர் வற்றியதும் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கை தோல் நீக்கி போட்டு மசிக்கவும்.

    அடுத்து அதில் மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், வெண்ணெய், மலாய் அல்லது கிரீம், உப்பு, கொத்தமல்லி,ப.மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும். இது சற்று தளர்வாக தான் இருக்கும்.

    ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி நன்றாக பரப்பி விடவும்.

    அப்போது சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து பிரெட் தூளில் போட்டு பிரட்டி வேண்டிய வடிவில் பிடிக்கவும். சிக்கன் மசாலா தளர்வாக இருக்கும் என்பதால் பிரெட் தூளில் பிரட்டினால் மட்டுமே சரியான வடிவில் வரும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    அடுத்து மற்றொரு முறை பிடித்து வைத்த கட்லெட்டை முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதை மிதமான தீயில் வைத்து தான் செய்ய வேண்டும்.

    இப்போது சூப்பரான சிக்கன் மலாய் கட்லெட் ரெடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த சட்னி 2 ,3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
    • இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சின்ன வெங்காயம் - 75 கிராம்

    தக்காளி - 2

    பூண்டு - 6 பற்கள்

    வர மிளகாய்- 12

    புளி - எலுமிச்சை அளவு

    கடுகு - 1/4 ஸ்பூன்

    பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

    கறிவேப்பிலை - 1 கொத்து

    நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    மிக்சி ஜாரில் வெங்காயம், பூண்டு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கொரகொரவென அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் அதே ஜாரில் பழுத்த தக்காளியுடன் புளியையும் சேர்த்து அதனை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும்.

    அடுத்தாக அதில் தக்காளி பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். சட்னியின் காரத் தன்மை போகும் வரை அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

    சட்னியில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து விட்டு, பின் அடுப்பில் இருந்து இறக்கினால் சட்னி ரெடி!

    சுட சுட இட்லிக்கு இந்த கடப்பா சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்! இந்த சட்னி 2 ,3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பார்க்க கஷ்டமாக தெரிந்தாலும் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுபலம்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 2 கப்

    நெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கு

    சீரகம் - அரை டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 4

    துருவிய கேரட் - 2 டீஸ்பூன்

    குடைமிளகாய் -2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

    கொத்தமல்லி தழை - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

    ப.மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, நெய், உப்பு, சீரகம் போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் துருவிய கேரட், குடைமிளகாய், கொத்தமல்லி தழை, ப.மிளகாய், உப்பு, சீரகத்தூள், மிளகாய் தூள்,தனியா தூள், மஞ்சள் தூள், சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பிசைத்து வைத்த மைதா மாவை மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.

    தேய்த்த மாவில் நடுவில் மசாலாவை வைத்து மாவு முழுவதும் பரப்பி விடவும். அதன் மேல் மற்றொரு சப்பாதியால் மூடி ஓரங்களில் நன்றாக ஒட்டி விடவும்.

    இப்போது சப்பாத்தியின் 4 ஓரங்களையும் வெட்டி (சதுர வடிவில்) விடவும். அடுத்து கத்தியால் கைவிரல் அகலத்தில் துண்டுகளாக வெட்டவும்.

    வெட்டிய ஒரு துண்டின் நடுவில் நீளமான குச்சியால் நடுவில் அழுத்தினால் இருபக்க ஒரங்களிலும் விரிந்து வரும்.

    இப்போது அதை இருபக்க முனைகளையும் பிடித்து வெவ்வோறு கோணத்தில் முறுக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்ததை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஆலு டிவிஸ்டர் சமோசா ரெடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது.
    • சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த உணவு சிறந்தது.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - 1 கப்

    கொள்ளு - கால் கப்

    ஜவ்வரிசி - 2 டீஸ்பூன்

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கு

    நெய் அல்லது நல்லெண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    கேழ்வரகு, கொள்ளு, வெந்தயம், ஜவ்வரிசியை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைக்கவும்.

    ஊற வைத்ததை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து புளிக்க விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் மாவை மெல்லிய தோசையாக வார்த்து சுற்றி நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு 1 நிமிடம் மூடி போட்டு வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கேழ்வரகு கொள்ளு தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, தக்காளி சட்னி சூப்பராக இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'பட்டர் காபி' என்று அழைக்கப்படும் 'புல்லட் புரூப் காபி', அதிக கலோரிகள் கொண்ட பானமாகும்.
    • பிரபலமாகப் பேசப்படும் 'புல்லட் புரூப் காபி' செய்முறை இதோ…

    'பட்டர் காபி' என்று அழைக்கப்படும் 'புல்லட் புரூப் காபி', அதிக கலோரிகள் கொண்ட பானமாகும். இதில் கூடுதல் கொழுப்புச்சத்து சேர்க்கப்படுகிறது. இதனால் அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றல் எளிதாகக் கிடைக்கும். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும் எழுத்தாளருமான டேவ் ஆஸ்ப்ரே இந்த காபியை முதலில் தயாரித்து அறிமுகப்படுத்தினார்.

    கீட்டோ உணவு முறை மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை விரும்புபவர்களின் முதல் தேர்வு புல்லட் புரூப் காபி. இதில் முக்கிய மூலப் பொருளாக எம்.சி.டி (மீடியம் செயின் டிரைகிளிசரைடுகள்) எண்ணெய் எனப்படும் நடுத்தர சங்கிலி கொழுப்புத் தொடர்கள் கொண்ட எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இதை தேங்காய் எண்ணெய்யில் இருந்து பிரித்தெடுக்கின்றனர். இதில் 50 சதவீதம் மட்டுமே கொழுப்புச்சத்து இருக்கும். சமூக வலைத்தளங்களில் பிரபலமாகப் பேசப்படும் 'புல்லட் புரூப் காபி' செய்முறை இதோ…

    தேவையான பொருட்கள்:

    விருப்பமான இன்ஸ்டன்ட் காபித்தூள் - 1½ டீஸ்பூன்

    சூடான தண்ணீர் - 1 கப்

    எம்.டி.சி எண்ணெய் அல்லது விர்ஜின் தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

    பசு நெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    சூடான தண்ணீரில் காபித்தூளைக் கொட்டி 2 முதல் 3 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.

    பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்க வேண்டும்.

    இந்தக் கலவையை மிக்சி அல்லது பிளெண்டர் மூலம் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.

    விருப்பத்துக்கேற்ப இதில் பட்டைப்பொடி மற்றும் இந்துப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

    இதை ஒரு கோப்பையில் ஊற்றி சூடாகப் பருகலாம்.

    புல்லட் ப்ரூப் காபியை சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நல்லது. இதில் இருந்து உங்களுக்குத் தேவையான நல்ல கொழுப்பு மற்றும் கனிம சத்துக்கள் கிடைக்கும்.

    குறிப்பு: தண்ணீர் சூடாக இருப்பது அவசியம். அப்போதுதான் எண்ணெய் மற்றும் நெய் நன்றாக உருகி தண்ணீரில் கலக்கும்.