என் மலர்

    சமையல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிலர் வாங்கி பயன்படுத்தாமல் விற்றுவிடுகிறார்கள்.
    • சமையலுக்கு பயன்படுத்தினால் பித்தத்தை அதிகரிக்கும் என்பதால்தான்.

    ரேஷன் கடைகளில் கிடைக்கும் பாமாயில் ஒரு பாக்கெட் விலை ரூ.30-க்கு கொடுக்கப்படுகிறது. இந்த பாமாயில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதை சிலர் வாங்கி பயன்படுத்துகிறார்கள். சிலர் வாங்கி பயன்படுத்தாமல் விற்றுவிடுகிறார்கள். இல்லையெனில் தாளிப்பதற்கு, அப்பளம், வடை சுட பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவே கொடுத்துவிடுகிறார்கள். காரணம் இதை சமையலுக்கு பயன்படுத்தினால் பித்தத்தை அதிகரிக்கும் என்பதால்தான்.

    அது மட்டுமல்லாமல் இதில் நிறைய கொழுப்பும் இருப்பதால் இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உடல் எடையை கூட்டும், கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இதய வால்வுகளில் அடைப்புகளை ஏற்படுத்தும். எனவே சிலர் இந்த எண்ணெய்யை பயன்படுத்தினால் பித்தம் காரணமாக தலைச்சுற்றல், மயக்கம் வரும் என்றும் கூறுகிறார்கள்.

    சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலில் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. இது மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். விட்டமின் ஏ நிறைய இருக்கிறது. எனவே ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பாமாயிலை வீட்டிலேயே சுத்திகரித்து, அதில் உள்ள பித்தத்தை போக்கிவிடலாம். எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருள்:

    ரேஷன் பாமாயில்

    புளி- சிறிதளவு

    கல் உப்பு- சிறிதளவு

    இஞ்சி-சிறிய துண்டு

    செய்முறை:

    மிதமான தீயில் இரும்பு கடாயை வைத்து அதில் வாங்கி வந்த பாமாயிலை ஊற்றுங்கள். எண்ணெய் சூடாகும் போது இதில் புளியை உருட்டி அதன் நடுவே உப்பை வைத்துக் கொள்ள வேண்டும்.

    அந்த புளியை வடை போல் தட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட வேண்டும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து இஞ்சியை போட வேண்டும். இவற்றையெல்லாம் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அப்படியே கொதிக்கவிடவும்.

    புளி, இஞ்சி ஈரத்தன்மை கொண்டிருப்பதால் அது பொறிந்து கொண்டே இருக்கும். இந்த சலசலப்பு அடங்கியதும் எண்ணெய்யை இறக்கி ஆறவிடவும்.

    இந்த எண்ணெயில் இருந்த பித்தத்தை இஞ்சி இழுத்துக் கொண்டிருக்கும். அதன்பிறகு புளி, இஞ்சியை எடுத்துவிடலாம். இதை சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். அப்போது எண்ணெயின் நிறம் மாறியிருக்கும்.

    இப்போது நீங்கள் ரேஷனில் வாங்கிய பாமாயில் ஆரோக்கியமானதாக மாறிவிட்டது. இனி எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எலும்புகள் வலுப்பெற சுக்கு களி பெரிதும் உதவுகிறது.
    • சுக்கு களி செய்து சாப்பிட்டால் சளி இருமல் குணமாகும்.

    சுக்கில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் அடங்கியிருக்கின்றன. சுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். சளி இருமல் என்றால் சுக்கு களி செய்து சாப்பிட்டால் சளி இருமல் குணமாகும்.

    அதுமட்டுமில்லாமல் உடலில் செரிமானப்பிரச்சினையை சீராக்குவதற்கும் இந்த சுக்குகளி உதவுகிறது. மேலும் பாலூட்டும் தாய்மார்கள் கூட இந்த சுக்கு களியை சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தம், வாந்தி போன்ற பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வினை அளிக்கும்.

    குழந்தைகளின் எலும்புகள் வலுப்பெற இந்த சுக்கு களி பெரிதும் உதவுகிறது.மேலும் பிரசவமான பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவாக மாற இந்த களியை செய்து தரலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் இது உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    அரிசி- 1 கப்

    சுக்கு -50 கிராம்

    ஏலக்காய் - ஒரு ஸ்பூன்

    நல்லெண்ணெய்- 100 கிராம்

    கருப்பட்டி வெல்லம் - 200 கிராம்

    செய்முறை:

    அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். சுக்கு மற்றும் வெல்லத்தை நன்றாக ஈடித்து வைத்து கொள்ள வேண்டும். அதன்பிறகு சுக்கு, ஏலக்காய், அரிசி அனைத்தும் மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு அடி கனமான வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கெட்டிதட்டாமல் கைவிடாமல் நன்கு கிளற வேண்டும். மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். மாவு நன்றாக வெந்த பிறகு அதில் தண்ணீர் சேர்த்து காய்ச்சிய வெல்லக் கரைசலை வடித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.

    அதன் பிறகு வாணலியில் ஒட்டாமல் வருவதற்கு நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு வரும் வரை நன்றாக கிளற வேண்டும். அதன்பிறகு உருண்டையாக திரண்டு வரும் சமயம் அடுப்பை அணைத்து பரிமாறவும். அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும். மேலும் பிரசவம் ஆன சமயத்தில் இதை தாய்க்கு கொடுப்பார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்ட் உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
    • உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகின்றன.

    நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்ட் உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகின்றன. நெல்லிக்காயை உணவில் சேர்த்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி நல்ல அடர்த்தியான கூந்தலையும், முகப்பொலிவையும் பெறலாம்

    தேவையான பொருட்கள்

    நெல்லிக்காய்- 10

    நாட்டு சக்கரை அல்லது வெல்லம்- 250

    ஏலக்காய் பொடி- ஒரு ஸ்பூன்

    நட்ஸ் வகைகள்- தேவையான அளவு

    நெய்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காயை வைத்து ஐந்து நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு நெல்லிக்காய்களை துருவி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

    இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெல்லிக்காய் மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். நெல்லிக்காய் மற்றும் சர்க்கரை ஒன்று சேர்ந்து திக்கான பதத்திற்கு வரும் வரை கைவிடாமல் கிளறவும்.

    இதில் ஏலக்காய் பொடி, மற்றும் பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகளை சேர்த்து கலக்க வேண்டும். கடாயில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.

    கைகளில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு சிறிய உருண்டைகளாக உருட்டலாம். அவ்ளோதான் சுவையான நெல்லிக்காய் லட்டு தயார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினை கீர் ட்ரை பண்ணி பாருங்க.
    • வித்தியாசமான முறையில் தினை கீர் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

    ஏதாவது வித்தியாசமா சமைக்கனுமா? அப்போ இந்த தினை கீர் ட்ரை பண்ணி பாருங்க. சுவையான வித்தியாசமான முறையில் தினை கீர் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தினை அரிசி- அரை கப்

    சர்க்கரை- 100 கிராம்

    கோவா- 50 கிராம் (சர்க்கரை இல்லாதது)

    நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் தலா- ஒரு டீஸ்பூன்

    கசகசா- 10 கிராம்

    ஏலக்காய்- 2

    பால்- டீஸ்பூன்

    குங்குமப்பூ- ஒரு சிட்டிகை

    செய்முறை:

    தினை அரிசியை தண்ணீரில் களைந்து சுத்தம் செய்து குக்கரில் குழைய வேகவைக்கவும். கசகசாவுடன் ஏலக்காய், பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். இனிப்பு இல்லாத கோவாவை உதிர்த்து போட்டு நன்றாக பிசைந்து சேர்க்க வேண்டும். அதனுடன் வேகவைத்துள்ள தினையையும், அரைத்த விழுது, சர்க்கரை மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும். இறுதியாக குங்குமப்பூ (தேவைப்பட்டால்) தூவி பரிமாறினால் சுவையான தினை கீர் தயார். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வித்தியாசமாக ஆரோக்கியம் அதிகம் உள்ள தினை அரிசி பொங்கலை செய்யலாம்.
    • தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

    பொங்கல் செய்யலாம் என்றாலே நம் நினைவில் வருது பச்சரிசி, வெல்லம் தான் ஆனால் சற்று வித்தியாசமாக ஆரோக்கியம் அதிகம் உள்ள தினை அரிசி பொங்கலை செய்யலாம். பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. உங்கள் நாளை ஒரு இனிப்புடன் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் தினை பொங்கல் செய்யுங்கள். இது ஒரு ஆரோக்கியமான உணவாகும் கூட அமையும். இந்த தினை பொங்கல் உங்களை பசியாற்ற வைத்ததுமின்றி உடலில் சேரக்கூடிய சர்க்கரை அளவை தடுத்து நல்ல ஆரோக்கியமான உடல் எடையையும் பராமரிக்க செய்கிறது.

    தேவையான பொருட்கள்:

    தினை- 100 கிராம்

    கடலைப்பருப்பு, பாசிபருப்பு தலா- 25 கிராம்

    நெய்- 50 கிராம்

    ஜாதிக்காய் பொடி- ஒரு சிட்டிகை

    நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் தலா- ஒரு டீஸ்பூன்

    துருவிய கொப்பரை- 2 டீஸ்பூன்

    வெல்லம்- 150 கிராம்

    செய்முறை:

    தினை மற்றும் பருப்பு வகைகளை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தேவையான அளவு நீர்விட்டு குழைய வேகவைக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி தினை கலவையில் சேர்த்து பொங்கல் பதம் வரும் வரையில் கிளறி இறக்கவும்.

    சூடான நெய்யில் ஜாதிக்காய் பொடி, துருவிய கொப்பரை சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்க வேண்டும். இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பரிமாறவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேங்காய்ப்பால் கலந்து இனிப்பு அப்பம் செய்தால் ஸ்பான்ஞ்ச் போல இருக்கும்.
    • பீங்கான் ஜாடியில் தயிர் உறை ஊற்றினால் சீக்கிரம் புளிக்காமல் இருக்கும்.

    * அடுப்பில் சாம்பார், ரசம் பொங்கி வழியாமல் இருக்க, பாதி கொதி வரும்போதே இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டால் பொங்கி வழியாது.

    * கிழங்குகளை வேகவைக்க, அரிசி கழுவிய நீரை பயன்படுத்தினால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * ஆம்லெட் செய்யும்போது ஒரு ஸ்பூன் மைதா மாவு கலந்து செய்தால் பெரியதாகவும், உப்பியும் வரும்.

    * கத்தரிக்காய் வேக வைக்கும்போது, அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் கத்தரிக்காய் நிறம் மாறாமல் இருக்கும்.

    * முருங்கை இலைகளை உருவிய பிறகு அதன் காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால், உடல், கை, கால் அசதி நீங்கும்.

    * துவரம் பருப்பு துவையல் செய்யும் போது, சிறிது கொள்ளும் சேர்த்து, வறுத்து அரைத்தால் மணமும், சுவையும் கூடுதலாக இருக்கும்.

    * பலகாரம் சுட்ட எண்ணெயில் வாழைக்காய் வறுவல் செய்தால் டேஸ்ட் பிரமாதமாக இருக்கும்.

    * மோரில் ஊறவைத்த வாழைப்பூவை சிறிது நெய்விட்டு வதக்கி துவையல் செய்தால் வித்தியாசமான சுவையில் சூப்பராக இருக்கும்.

    * தேங்காய்ப்பால் கலந்து இனிப்பு அப்பம் செய்தால் ஸ்பான்ஞ்ச் போல மிருதுவாக இருக்கும்.

    * ரசம் கொதிக்கும்போது 4-5 புதினா இலைகளை போட்டு கொதிக்கவிட்டால், வாசனை தூக்கலாக இருக்கும்.

    * பீங்கான் ஜாடியில் தயிர் உறை ஊற்றினால் சீக்கிரம் புளிக்காமல் இருக்கும்.

    * பிளாஸ்க் காலியாக இருக்கும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு வைத்தால் வாடை வராமல் இருக்கும்.

    * குழம்பு, சாம்பாரை தட்டு போட்டு மூடி வைத்தால் சூட்டில் வியர்த்துக் கொட்டி, நீர்த்துவிடும். எனவே, ஒரு கரண்டியை போட்டு மூடவும்.

    * கொத்தமல்லி சட்னி அரைக்கும் போது புளிக்கு பதிலாக எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்தால், சட்னி கறுக்காது. பசுமையாகவே இருக்கும்.

    * மோர்க்குழம்புக்கு மசாலா அரைக்கும் போது சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைக்கவும். குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

    * கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது. ருசியாகவும் இருக்கும்.

    * பருப்பு வேகவைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். சீக்கிரம் வெந்துவிடும்.

    * தோல் சீவிய இஞ்சித்துண்டை போட்டு உறை ஊற்றி வைக்கும்போது தயிர் ரொம்பவும் புளிக்காமல் அளவான

    பதத்தில் இருக்கும்.

    * காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடுதண்ணீரில் டிகாஷன் போடும் பாத்திரத்தை (ஃபில்ட்டரை) சிறிது நேரம் வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காபித்தூள் இறங்கிவிடும்.

    * புளி இல்லாமல் வெறும் தக்காளி மட்டும் வைத்து ரசம் வைப்பவர்கள், ரசத்தை இறக்கியதும் அரைமூடி எலுமிச்சைச்சாறு சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.

    * கிழங்கு வகைகளை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. காற்றாட திறந்து வைத்தால்தான் கெடாமல், காயாமலும் இருக்கும்.

    * எல்லா அசைவ சமையலுக்கும் குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு விழுது அவசியம். இஞ்சி அரை கிலோ, பூண்டு 300 கிராம் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். அரைத்ததும் அதனுடன் சிறிது உப்புத்தூள் கலந்து வைக்க வேண்டும். இதை இரண்டாகப் பிரித்து, ஒரு பாதியை பிரிசரிலும் வைக்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் காளான் டிக்கா.
    • ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

    சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் காளான் டிக்கா. இந்த ரெசிபியை இன்று நாம் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    டிக்கா என்று சொல்லும் போது சிக்கன் டிக்கா, க்ரில்ட் சிக்கன் டிக்கா, தந்தூரி சிக்கன் டிக்கா என்று பல விதமான சிக்கன் டிக்காகளை வெளியில் ரெஸ்டாரண்ட்களில் சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் இன்று நாம் டிக்கா ரெசிபிக்களில் ஒன்றான காளான் டிக்கா ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    காளான் - 1 பாக்கெட்

    கெட்டித்தயிர் - 1/2 கப்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

    தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    உப்பு - தேவைக்கேற்ப

    எலுமிச்சை சாறு - 1/2

    எண்ணெய் - சிறிதளவு.

    செய்முறை:

    ஒரு பவுலில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கலந்து வைத்த இந்த கலவையில் கழுவி வைத்த முழு காளான் மற்றும் நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    ஊறிய காளானை டிக்கா குச்சியில் முதலில் குடை மிளகாய், பிறகு வெங்காயம், அதன் பிறகு காளான் என அடுக்கடுக்காக அடுக்கிக் கொள்ளவும். பிறகு இதனை 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.

    தோசைக்கல்லை சூடு செய்து, அதில் சிறிது எண்ணெய் தேய்த்து மிதமான தீயில் காளான்களை சேர்த்து ஒவ்வொரு மூன்று நொடிக்கு ஒரு தடவை திருப்பி போட்டு, 15 நிமிடம் மசாலா வற்றி காளான் வெந்தவுடன் எடுத்தால் சுவையான காளான் டிக்கா தயார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாக்லெட் சுவையில் இருக்கும் பொருட்களைத் தான் குழந்தைகள் முதலில் தேர்வு செய்வார்கள்.
    • வீட்டிலேயே ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

    சாக்லேட் ஐஸ்கிரீம், சாக்லேட் கேக், சாக்லேட் மில்க் ஷேக் என எதனை தேர்ந்தெடுத்தாலும் அதில் சாக்லெட் சுவையில் இருக்கும் பொருட்களைத் தான் குழந்தைகள் முதலில் தேர்வு செய்வார்கள். அதனால் பல அம்மாக்களும் சாக்லேட் செய்வது சுலபமாக இருந்தால் அதனை வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாமே என்று நினைப்பார்கள். வாங்க நாம இன்றைக்கு கேரமல் சாக்லேட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சர்க்கரை - 200 கிராம்

    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் (உப்பு இல்லாதது)

    பிரஷ் கிரீம் -கப்

    உப்பு - 1 சிட்டிகை

    மில்க் சாக்லெட் - 400 கிராம்

    கார்ன் சிரப் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    (குறிப்பு கரண்டிக்கு பதிலாக சிலிக்கான் ஸ்பாட்சுலாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்).

    ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் சர்க்கரையை கொட்டி மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும். சிறிது நேரத்தில் சர்க்கரை உருகி கேரமலாக மாற ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதில் பிரஷ் கிரீம் மற்றும் அரை சிட்டிகை உப்பு கலந்து தனியாக வைக்கவும்.

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். மற்றொரு சிறிய பாத்திரத்தில் 250 கிராம் மில்க் சாக்லெட்டை போட்டு. அதை தண்ணீர் இருக்கும் பாத்திரத்தின் உள்ளே வைக்கவும். தண்ணீரின் வெப்பத்தால் சாக்லெட் உருக ஆரம்பிக்கும். இதை உடன் பாயிலிங் முறை" என்று குறிப்பிடுவார்கள்.

    சாக்லெட் முழுவதுமாக உருகியதும், அதனுடன் கார்ன் சிரப் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் இந்தக் கலவையை இரண்டு பங்காக பிரித்துக்கொள்ளவும்.

    ஒரு செவ்வக வடிவ பாத்திரத்தின் உள்ளே பட்டர் பேப்பரை வைக்கவும். அதன் மீது உருக்கி வைத்துள்ள ஒரு பங்கு மில்க் சாக்லெட்டை பரவலாக ஊற்றவும். அதற்கு மேல் கேரமல்லை ஊற்றி தடவ வேண்டும். பின்னர் மீண்டும் அதன் மேல் மற்றொரு பங்கு மில்க் சாக்லெட்டை ஊற்றி பரப்பி விடவும். இதனை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும்.

    சாக்லெட் சற்று கெட்டியாகி இருக்கும். அதை 15 அங்குல அகலம் கொண்ட துண்டுகளாக வெட்டி எடுத்து. 30 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். மீதம் இருக்கும் 150 கிராம் மில்க் சாக்லெட்டை மீண்டும் டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக் கொள்ளவும்.

    இப்போது குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் சாக்லெட் துண்டுகளை வெளியே எடுக்க வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக உருக்கிய சாக்லெட்டில் தோய்த்து, பட்டர் பேப்பரில் வரிசையாக அடுக்கி வைக்கவும். பின்னர் மீண்டும் அதை குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வரை வைத்து எடுக்க வேண்டும். இப்போது கேரமல் நிறைந்த சுவையான சாக்லெட்டுகள் தயார்.

    இதன் மீது தங்க நிற ஜரிகை காகிதம் ஒட்டி, நண்பர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் மாறாமல் இருக்கும்.
    • முட்டை கெட்டுப்போகாமல் இருக்க லேசாக எண்ணெய் தடவி வைக்கலாம்.

    * சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.

    * பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

    * வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும் ருசியாக இருக்கும்.

    * சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.

    * முட்டையை வேக வைக்கும் பொழுது சில துளிகள் கடலை எண்ணெய், கல் உப்பு சேர்த்தால் எளிதில் வேகும்.

    * கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பாதாமை ஊற வைத்தால் அதன் தோல் எளிதாக உரிந்து வரும்.

    * ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    * இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்.

    * மழைக்காலங்களில் உப்பில் நீர் சேராமல் இருக்க, பிளாஸ்டிக் சீட் மீது உப்பை கொட்டி, காற்றுபுகாதவாறு கட்டி வைத்தால் போதும்.

    * புளி குழம்பு தயாரிக்கும்போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.

    * முட்டை கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது லேசாக எண்ணெய் தடவி வைக்கலாம்.

    * முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி காற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.

    * வாழைப்பூ சுத்தம் செய்யும்போது கையில் சிறிது நல்லெண்ணெய் தடவிக் கொண்டால் கையில் கறை ஒட்டாது.

    * காரக்குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் போதும். காரத்தின் வீரியம் குறைந்துவிடும்.

    * சோறு ஒட்டாமலும் உதிரியாகவும் இருக்க, அரிசி ஊற வைக்கும்போது சில ஐஸ் கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.

    * கறிவேப்பிலை வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரை கெட்டுப் போகாது.

    * மெதுவடை மொறு மொறு வென்று இருக்க, உளுத்தம் பருப்புடன் கொஞ்சம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

    * கீரை சமைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.

    * பருப்பு வேக வைக்கும்போது நெய் சேர்த்து சமைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.

    * வீட்டில் எறும்பு புற்று இருந்தால் அங்கு கொஞ்சம் பெருங்காயத்தூளை தூவி விட்டால் எறும்புத்தொல்லை இருக்காது.

    * துண்களில் எண்ணெய் கறையோ கிரீஸ் கறையோ பட்டுவிட்டால் அதில் சிறிதளவு நீலகிரித்தைலம் விட்டு கழுவினால் அந்த கறை போய்விடும்.

    * ஃப்ரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் அவற்றை மூடி வைக்க கூடாது.

    * வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்துவிட்டு நறுக்கினால் கண்களில் எரிச்சல் இருக்காது.

    * அதிகம் கனமுள்ள கல்லை தோசைக்கும், கனம் அதிகம் இல்லாத கல்லை சப்பாத்திக்கும் பயன்படுத்த வேண்டும்.

    * சாதம் வடிக்கும் போது சிறிது குழைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் குழையாமல் இருக்கும்.

    * கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து அல்வா போன்று செய்யலாம். அதிக ருசியும், ஆரோக்கியமும் இருக்கும்.

    * உப்பு ஜடியில் தண்ணீர் வடிவதை தடுக்க அதில் புளித்துண்டை ஜாடியில் போட்டு வைத்தால் நீர் தன்மையை புளி எடுத்துவிடும்.

    * அதிகப்படியாக வாங்கி வைத்துள்ள எண்ணெய்யில் பச்சைமிளகாயை போட்டு வைத்தால் எண்ணெய் கசடு தங்காது.

    * சாம்பார் மணக்க, வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் கடைசியில் சேர்த்தால் சாம்பார் மணமாக இருக்கும்.

    * வெந்தயக்கீரை சமைக்கும் போது சிறிது வெல்லம் கலந்து சமைத்தால் கசப்பு தன்மை இருக்காது.

    * வாழைக்காயை நறுக்கும்போது சிறிதளவு உப்புத்தூளை கைகளில் தேய்த்துக்கொண்டால் கறைபிடிக்காது, பிசுபிசுப்பு நீங்கும்.

    * கறிவேப்பிலை செடி நன்றாக வளர புளித்த மோரை ஊற்றலாம்.

    * பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு காரட் சேர்த்து செய்தால் கசப்பே தெரியாது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மீல் மேக்கர் புட்டு சாம்பார் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா?

    உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா? இதுவரை நீங்கள் மீல் மேக்கரை பிரியாணியிலும், மசாலா செய்தும் சாப்பிட்டிருக்கலாம். ஆனால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் அட்டகாசமான சுவையில் புட்டு செய்யலாம் தெரியுமா? இந்த மீல் மேக்கர் புட்டு சாம்பார் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த புட்டு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மீல் மேக்கர் - 20

    வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

    கறிவேப்பிலை - சிறிது

    பச்சை மிளகாய் - 2 (இரு துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    மசாலா அரைப்பதற்கு:

    துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்

    பட்டை - 1

    ஏலக்காய் - 1

    கிராம்பு - 2

    சோம்பு - 2 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு, உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, 2 நொடிகள் ஒருமுறை அரைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் மிக்சர் ஜாரில், தேங்காய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, இஞ்சி-பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, சிறிது உப்பு தூவி, குறைவான தீயில் வைத்து சில நிமிடங்கள் கிளறி விட வேண்டும். அடுத்து அரைத்த மீல் மேக்கரை சேர்த்து, மசாலாவுடன் மீல் மேக்கர் ஒன்று சேரும் வரை நன்கு கிளறி, இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைலில் மீல் மேக்கர் புட்டு தயார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo