search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
    X

    உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைவரும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைவரும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, நில அளவை பிரிவு உதவி இயக்குனர் சேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×