search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை தாக்கிய கணவருக்கு சிறை
    X

    பெண்ணை தாக்கிய கணவருக்கு சிறை

    • பெண்ணை தாக்கிய கணவருக்கு சிறை
    • பெண்ணை தாக்கிய கணவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    புதுக்கோட்டை,

    ஆலங்குடி அருகே கொத்தக்கோட்டை ஊராட்சி வடக்கு தோப்புப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ராஜேந்திரன் (வயது 39). டிரைவர். இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி பிரேமாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்து பிரேமாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அருகில் கிடந்த கம்பியை எடுத்து மனைவி தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் நேற்று ராஜேந்திரனை கைது செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×