search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்
    X

    மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்

    • குமாரபாளையம் அருகே‌ சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா நடுவநேரி பகுதியை சேர்ந்தவர் மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர்.
    • இருவரும் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே‌ சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா நடுவநேரி பகுதியை சேர்ந்தவர் ரித்தீஷ்(வயது 20). தனியார் நிறுவன பணியாளர். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சேலம் கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே உள்ள பேக்கரி முன்பு வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் கல்லூரி பகுதியில் இருந்து வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோடியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×