search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார், பைக்கில் குட்கா  கடத்திய 2 பேர் சிக்கினர்
    X

    கார், பைக்கில் குட்கா கடத்திய 2 பேர் சிக்கினர்

    • மேலும் 26 கிலோ குட்கா மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அவரிடம் இருந்து காரையும், 320 கிலோ குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் சிப்காட் போலீசார் பெங்களூரு - ஓசூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 26 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான்பராக், குட்கா உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது.

    அதை வைத்திருந்த கிருஷ்ணகிரி புதுப்பேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த குமார் (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 26 கிலோ குட்கா மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதே போல ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 320 கிலோ ஹான்ஸ், பான்மசாலா இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

    இதையடுத்து குட்கா கடத்தியதாக கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்த ஜெகதீஷ் (29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து காரையும், 320 கிலோ குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×