search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே டிப்ளமோ படித்த மாணவர் தற்கொலை
    X

    கள்ளக்குறிச்சி அருகே டிப்ளமோ படித்த மாணவர் தற்கொலை

    • கள்ளக்குறிச்சி அருகே டிப்ளமோ படித்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • வெங்கடேசன் கடந்த 2-ந்தேதி காலை வீட்டிலிருந்து வெளியேறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 23). இவர் டிப்ளமோ முடித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது தந்தை கண்ணன் மகன் வெங்கடேசனிடம் படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஏன் வீட்டில் இருக்கிறாய் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வெங்கடேசன் கடந்த 2-ந்தேதி காலை வீட்டிலிருந்து வெளியேறினார். மீண்டும் மாலை வீடு திரும்பியவர் வாந்தி எடுத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை விசாரித்த போது எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக கூறினார்.

    உடனடியாக வெங்கடேசனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்ப த்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வெங்கடேசன் இறந்துவிட்டார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×