search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
    X

    சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

    • நேற்று உதயகுமார் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு குளிக்க சென்றார்.
    • தீயணைப்பு வீரர்கள் 2 மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றியபோது அதில் உதயகுமார் இறந்து கிடந்தார்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பெரியூர் கண்டியபேரியை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 41). விவசாயி. அப்பகுதியில் காளியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது.

    இதில் நேற்று நடந்த மஞ்சள்பால் ஆடுதலில் பங்கேற்றுவிட்டு உதயகுமார் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு குளிக்க சென்றார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்தார். அப்போது அவரது உடலில் காயம் ஏற்பட்டு நீரில் மூழ்கினார்.

    இந்நிலையில் குளிக்க சென்ற உதயகுமார் வெகுநேரமாகியும் வராததால், அவரது உறவினர்கள் அங்கு தேடி சென்றபோது கிணற்று அருகே அவரது ஆடைகள் மட்டும் இருந்தது. இதனால் அவர் மூழ்கியிருக்கலாம் என நினைத்து சங்கர ன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக அங்கு வந்த வீரர்கள் 2 மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றியபோது அதில் உதயகுமார் இறந்து கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தொடர்ந்து கரிவலம்வந்த நல்லூர் போலீசார் அவரது உடலை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×