search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
    X

    பாளையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

    • செல்லத்துரை பாளை எல்.ஐ.சி. அலுவலகம் அருகே நடந்து வரும் கட்டிட வேலைக்காக சென்றுள்ளார்.
    • எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் செல்லத்துரை தூக்கி வீசப்பட்டார்.

    நெல்லை:

    பாளை அருகே உள்ள திருமலைக்கொழுந்துபுரம் மணக்காடு வேதக் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 50). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். செல்லத்துரை இன்று காலை பாளை எல்ஐசி அலுவலகம் அருகே நடந்து வரும் கட்டிட வேலைக்காக சென்றுள்ளார்.

    அப்போது கட்டிட வேலைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண் சரிந்து விழுந்ததால் அதில் நின்று கொண்டிருந்த செல்லத்துரை அருகில் இருந்த கம்பியை பிடித்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் செல்லத்துரை தூக்கி வீசப்பட்டார்.

    அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே செல்லத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×