search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ வெள்ளை திருக்கை மீன்
    X

    அபூர்வ வெள்ளை திருக்கை மீன்.

    மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ வெள்ளை திருக்கை மீன்

    • கடலூர் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற வினோத் என்பவரின் விசைப்படகு நேற்று கரை திரும்பியது.
    • அபூர்வ வகையான வெள்ளை திருக்கை மீன் ஒன்று இருந்தது. இந்த மீன் சுமார் 25 கிலோ எடை இருந்தது.

    கடலூர்:

    கடலூர் துறை முகத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீன்பிடிப்ப தற்காக மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.


    இதில் தினந்தோறும் வஞ்சிரம், வவ்வால், பன்னி சாத்தான், சங்கரா மீன், திருக்கை மீன் உள்ளிட்ட மீன்கள் பிடித்து வருகின்றனர். திருக்கை மீன்களில் புள்ளி திருக்கை, செந்திருக்கை, கொம்பன் திருக்கை உள்ளிட்ட 3 வகைகள் உள்ளன.

    இந்நிலையில் கடலூர் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற வினோத் என்பவரின் விசைப்படகு நேற்று கரை திரும்பியது. அப்போது வலையில் இருந்த மீன்களை பார்த்தபோது, அதில் மிகவும் அபூர்வ வகையான வெள்ளை திருக்கை மீன் ஒன்று இருந்தது. இந்த மீன் சுமார் 25 கிலோ எடை இருந்தது.

    இது குறித்து அந்த பகுதி மீனவர்கள் கூறுகையில், இதுவரை 3 வகை திருக்கை மீன்களை மட்டுமே பார்த்திருப்பதாகவும் வெள்ளை திருக்கை மீனை தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக பார்ப்பதாகவும் கூறினர். இதனால் இது ஒரு அபூர்வ வகை மீன் என தெரிவித்தார்.

    Next Story
    ×