search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
    X

    வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

    • தனிப்படை போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.
    • ராகுலை கைது செய்துள்ள நிலையில் பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம்அருகே வீட்டு தோட்டத்தில் ஒருவர் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்க்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு போலீசார் நாகை அருகே நரிமணம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நரிமணம் சுல்லாங்கால் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 21) என்பவரது வீட்டின் தோட்டத்தில்

    கஞ்சா செடி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக பிரகாஷின் தம்பி ராகுலை கைது செய்து நாகூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ராகுலின் அண்ணன் பிரகாஷ் ஈரோட்டில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணிபுரிந்து வருவதாகவும், அவர் ஈரோட்டில் இருந்து கஞ்சா விதையினை எடுத்து வந்து தோட்டத்தில் விதைத்து வளர்த்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. மேலும் பிரகாஷின் தம்பி ராகுலை கைது செய்துள்ள நிலையில் பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்.

    நாகூர் அருகே கிராம பகுதியில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×