search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  ஓடும் ஆம்புலன்சில்  பெண்ணுக்கு ஆண் குழந்தை  பிறந்தது
    X

    ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததை படத்தில் காணலாம்.

    பண்ருட்டியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

    • திடீரென பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுநர் சரவணன் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.
    • தாயும் சேயும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கருக்கையைச் சேர்ந்தவர் மணி இவரது மனைவி மீனா (வயது 30) நிறை மாத கர்ப்பிணி. இந்நிலையில் இவருக்கு நேற்று இரவு 7 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன் மூலம் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அப்போது செம்மேடு அருகே வந்தபோது திடீரென பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுநர் சரவணன் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஆம்புலன்ஸ் அவசர கால ஊழியர் ஆம்புலன்ஸில் மீனாவிற்கு பிரசவம் பார்த்தார். அதில் மீனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும் சேயும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    Next Story
    ×