search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் ஆதார் சிறப்பு முகாம் தொடக்கம்
    X

    ஆதார் சிறப்பு முகாம் நடந்தபோது எடுத்தபடம்

    பாவூர்சத்திரத்தில் ஆதார் சிறப்பு முகாம் தொடக்கம்

    • கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி ஆகியோர் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தனர்.
    • முகாமில் புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்புணர்வு குழு, பாவூர்சத்திரம் அஞ்சல் அலுவலகம் இணை ந்து நடத்தும் ஆதார் சிறப்பு முகாம் பாவூர் சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் 4 நாட்கள் நடைபெறுகிறது.

    அரிமா சங்கத்தலைவர் கே.ஆர்.பி. இளங்கோ தலைமை தாங்கினார். சங்க செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, பள்ளி தலை மை ஆசிரியை ஜான்சி ராணி ஆகியோர் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தனர். முகாமில் புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர், கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர், அஞ்சலக தென்காசி கோட்ட ஆய்வாளர் ராமசாமி, துணை அஞ்சல் அதிகாரி ஜெயக்குமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஆனந்தசெல்வி, உறுப்பினர் சங்கர், அரிமா சங்க உடனடி முன்னாள் தலைவர் அருணாசலம், முன்னாள் செயலாளர் கலைச்செல்வன், செய லாளர் (தேர்வு) சசி ஞான சேகரன், பொருளாளர் (தேர்வு) சினேகாபாரதி, விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    முகாமானது வருகிற (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. எனவே புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் தேவைப்படுவோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×