search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கான மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கடலூர் மாவட்ட கலெக்டர் தகவல்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கான மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கடலூர் மாவட்ட கலெக்டர் தகவல்

    • சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
    • 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக் கான தொண்டு நிறு வனங்கள் மற்றும் சேவை புரிபவர்கள், சிறப்பாக சேவைபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற் படுத்தும் நோக்கத்தோடு, அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் 15-ந் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் தமிழக அளவில் சிறப்பாக சேவைபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு கீழ்காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    மாற்றுத்திறனாளி களுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறு வனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், மாற்றுத்திற னாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனா ளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறு வனத்திற்கு 10கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்களுக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேற்காணும் விருது களுக்கான விண்ணப்ப படிவங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம், கடலூர் அவர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து உரிய அனைத்து சான்றிதழ் களுடன் 26-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×