search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தா.பழூர் அருகே அடையாளம் ெதரியாத முதியவர் பிணம்
    X

    தா.பழூர் அருகே அடையாளம் ெதரியாத முதியவர் பிணம்

    • தா.பழூர் அருகே அடையாளம் ெதரியாத முதியவர் பிணம் கிடந்தது
    • இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே வீரபாண்டியன் என்பவருக்கு சொந்தமான பருத்தி வயலில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காரைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மணிமாறனிடம் தகவல் தெரிவித்தனர். மணிமாறன் தா.பழூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முதியவரின் சடலத்தை மீட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மரணம் அடைந்த நபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×