search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்
    X

    போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்

    • தா.பழூர் போலீசார் சார்பில் நடந்தது
    • போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் தா.பழூர் போலீசார் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமை தாங்கி போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் கெடுதல்கள் குறித்தும், சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் கடத்தி வருதல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல், வாங்கி பயன்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விலக்கி பேசினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், (பயிற்சி)பெபின்செல்வபிரிட்டோ உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்."

    Next Story
    ×