search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தை ஏற்படுத்தி காதலியை கொலை செய்த காதலன் கைது
    X

    விபத்தை ஏற்படுத்தி காதலியை கொலை செய்த காதலன் கைது

    • விபத்தை ஏற்படுத்தி காதலியை கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டார்
    • ஜெயக்கொண்டம் கிளைச்சிறையில் அடைப்பு

    செந்துறை,

    பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகள் அபிநயா (வயது 23). தந்தை இறந்து விட்ட நிலையில் தனது தாயார், தங்கை, தம்பியுடன் வசித்து வந்தார். பட்டதாரியான இவர் குடும்ப வறுமை காரணமாக அரியலூரில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 30-ந்தேதி மதியம் உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டு கடையில் இருந்து சென்றவர் வீடு திரும்ப–வில்லை. இந்தநிலையில் உடை–யார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி கிரா–மத்தில் உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி உடலை கைப் பற்றி விசாரணை நடத்தி–னார்.

    விசாரணையில் தஞ்சா–வூர் மாவட்டம் பந்தநல் லூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பார்த்தி–பன் (32) என்பவர் அரிய–லூரில் உள்ள ஒரு டீக்கடை–யில் கேஷியராக வேலை பார்த்து வந்ததும், இவரும் அபிநயாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தெரியவந்தது.

    ஆனால் அவர்களது கா தலுக்கு எதிர்ப்பு கிளம் பிய நிலையில், வருகிற 6-ந்தேதி பார்த்திபனுக்கும், வேறு ஒரு பெண்ணிற்கும் பந்தநல்லூரில் திருமணம் நடக்க இருந்தது. இந்த பத்திரிகையை நண்பர்க–ளுக்கு வழங்க உடையார்பா–ளையத்துக்கு பார்த்திபன் வந்துள்ளார்.

    இதனை அறிந்த அபி–நயாவும் உடையார்பாளை–யம் வந்து பார்த்திபனை சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட் டுள்ளது. இந்த நிலையில் தான் அபிநயா மர்ம–மான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் செல்போன் டவர் மூலம் ஆய்வு செய்து வீட்டில் இருந்த பார்த்தி–பனை கைது செய்ததோடு அவரது மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பார்த்திபன் தன்னை சந்திக்க வந்த அபிநயாவை நள்ளிரவில் அரியலூரில் கொண்டு விட வேகமாக சென்றதாகவும், அந்த சமயத்தில் ஏற்பட்ட விபத்தில் அபிநயா பலத்த காயமடைந்து சுயநினைவு இழந்து விட்டதாகவும், இதனால் அச்சம் அடைந்து அபிநயாவை சாலை ஓரம் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் பார்த்திபன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை காப்பாற்ற முயற்சி செய்யா–மல் காதலன் மனிதாபம் இல்லாமல் தப்பிச் சென்றது போலீசார் இடையே சந்தே–கத்தை ஏற்படுத்தியது. எனவே இது விபத்து தானா அல்லது பார்த்திபன் வேறு பெண்ணை திருமணம் செய்வதால் ஏற்பட்ட தக–ராறில் அடித்து கொலை செய்து வீசி சென்றாரா என்கிற கோணத்தில் விசா–ரணை நடத்தினர். விசாரணை முடிவில் பார்த்திபன் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்தி காதலியை கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை இன்ஸ்பெக்டர் வேலுசாமி கைது செய்து ஜெயங்கொண்டம் நீதி–மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×