search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சியில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
    X

    ஊராட்சியில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

    • ஊராட்சியில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
    • மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    அப்போது கடுகூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கடுகூர் ஊராட்சியில் ரூ.5.25 லட்சம் வரை எலக்ட்ரிக்கல், பிளீச்சிங் பவுடர் வாங்கியதாக முறைகேடு நடந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு காண்பிக்கப்படவில்லை, பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்படவில்லை. மேலும் குடிநீர் வினியோகமும் முறை செய்யப்படுவதில்லை. எனவே மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கடுகூர் ஊராட்சியில் கணக்குகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    Next Story
    ×