என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓய்வுபெற்ற நீதிபதிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
- ஓய்வுபெற்ற நீதிபதிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவுவிடப்பட்டுள்ளது
- அரியலூர் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
அரியலூர்:
சென்னை மேடவாக்கத்தில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 66). இவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஆவார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணத்தை ரூ.22.500க்கு வாங்கியுள்ளார். இதற்கிடையில் உபகரணத்தில் சில பகுதிகள் வேலை செய்யவில்லை. இது குறித்து தான் வாங்கிய தனியார் நிறுத்தில் குறையை சரி செய்ய கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அந்த நிறுவனத்தின் மீது ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், சென்னை தெற்கு மாவடட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதத்தில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பின் விவரம் வருமாறு:
குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் விற்பனை செய்யப்பட்ட பின்பு உத்தரவாதம் நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ள காலத்தில் பழுது ஏற்படும் போது அதனை நீக்கி தர வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமையாகும். ஆனால் அதனை விற்பனையாளர் செய்ய தவிறிவிட்டார். என்பதை புகார்தாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே புகார் தாரருக்கு குடிநீர் சுத்திகரிப்பான உபகரணத்தை மாற்றி புதிய உபகரணத்தை வழங்க வேண்டும் அல்லது அவர் செலுத்திய ரூ.22.500-ஐ 13.10.2015 ஆம் தேதியிலிருந்து ஆண்டொன்றுக்கு நூற்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு புகார்தாரருக்கு யுரேகா போர்ப்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.
சேவை குறைபாட்டிற்கும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு புகார்தாரருக்கு நிறுவனத்தினர் ரூ 50,000 இழப்பீடு வழங்க வேண்டும். இதனை 4 வாரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்