search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி தொழிலாளி பலி
    X

    வாகனம் மோதி தொழிலாளி பலி

    • கடைவீதிக்கு நடந்து சென்றார்.
    • வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் வைத்திலிங்கம்(வயது 41). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மீன்சுருட்டி கடைவீதிக்கு நடந்து சென்றார்.கும்பகோணம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த வாகனம், வைத்திலிங்கம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினார்.இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்.

    Next Story
    ×