search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகையில், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி- கலெக்டர் பங்கேற்பு
    X

    பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பங்கேற்றார்.

    நாகையில், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி- கலெக்டர் பங்கேற்பு

    • எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
    • மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அடுத்த மரைக்கான் சாவடி பகுதியில் உள்ள கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் எனப்படும் கெயில் நிறுவன எரிவாயு சேகரிப்பு மையம் உள்ளது.

    அங்கு உள்ள எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    நாகப்பட்டினம் மாவட்ட கலெகடர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வயல் வெளியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டால் எவ்வாறு தகவல் அளிக்க வேண்டும், மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து கெயில் நிறுவன ஊழியர்கள் பொதுமக்களுக்கு செய்து காட்டினார்.

    இதில் வருவாய்த்துறை பினர் தீயணைப்புத் துறையினர் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×