என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் ஆட்டோ தம்பி நூலகம்
- கோவையில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பயணத்திற்கு ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர்.
- ஆட்டோ தம்பி நூலகத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கோவை :
ஆட்டோ தம்பி என்ற பெயரில் ஆட்டோவில் நம்மை தேடி வரும் நூலகத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
கோவையில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பயணத்திற்கு ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு ஆட்டோவில் பயணிப்பவர்களும், ஆட்டோ இயங்காத நேரத்தில் டிரைவர்களும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதையே வழக்கமாக கொண்டிரு க்கின்றனர்.
இதனிடையே பயணிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஆட்டோ தம்பி என்ற பெயரில் ஆட்டோ நூலகம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி இன்று ஆட்டோ தம்பி நூலகத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
ரூ.20 ஆயிரம் மதிப்பில் இந்த ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த ஆட்டோவில் புத்தகங்கள், நாவல்கள் இடம் பெற்றுள்ளன.சோதனை அடிப்படையில் துடியலூரை சேர்ந்த சையது என்பவரின் ஆட்டோவில் இந்த ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. "ஆட்டோ தம்பி" என்ற இந்த ஆட்டோ நூலகத்தை தொலைபேசி மூலம் அழைத்து தங்களது இருப்பிடத்திற்கு வரவழைத்து பயணிக்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்