search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் 15 வயது சிறுவன் தற்கொலை
    X

    செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் 15 வயது சிறுவன் தற்கொலை

    • தமிழேந்தி செல்போன் வைத்துக்கொண்டு விளை யாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பாஸ்கரன் கண்டித்துள்ளார்.
    • வீட்டுக் கூரையின் மூங்கில் சாரத்தில், தமிழேந்தி, சேலையால் தூக்கிட்டுத் தொ ங்கிக் கொண்டிருந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது.47). இவரது மகன் தமிழேந்தி (15) இவன், உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு முடித்துவிட்டு, வீட்டில் இருந்துள்ளான். இந்த நிலையில், வீட்டில், தமிழேந்தி செல்போன் வைத்துக்கொண்டு விளை யாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பாஸ்கரன், தமிழே ந்தியை கண்டித்துவிட்டு, வேலையின் காரணமாக மங்கலம்பே ட்டைக்கு புறப்பட்டு சென்று விட்டார், பின்னர், வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, அங்கு, வீட்டுக் கூரையின் மூங்கில் சாரத்தில், தமிழேந்தி, சேலையால் தூக்கிட்டுத் தொ ங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்ததும், பதறிப்போன பாஸ்கரன், தனது மகனை மீட்டு, சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு, சிகிச்சை பலனளிக்காமல் தமிழேந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, மங்கலம்பேட்டை போலீஸில் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×