search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்திய தனியார் நிறுவனத்தில், அதிகாரிகள் சோதனை
    X

    (கோப்பு படம்)

    ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்திய தனியார் நிறுவனத்தில், அதிகாரிகள் சோதனை

    • மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிப்பு.
    • ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை.

    ஓசூர்:

    ஓசூர் அருகே ஐஎஸ்ஐ முத்திரையை தனியார் நிறுவனம் தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்திய தர நிர்ணய ஆணையத்தின் சென்னை கிளை அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து அதன் அதிகாரிகள் குழு ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி கெபாசிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தி மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 155 எண்ணிக்கையிலான மோட்டார் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் இந்திய தர நிர்ணயச் சட்டம், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×