search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு

    • சேலம் மாவட்டத்தில் 3 -வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.
    • 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 3 -வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தம்மம்பட்டியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல் வெளிகள் உ ள்பட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து அந்த பகுதியில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.

    இேத போல ஓமலூர், எடப்பாடி உள்பட பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    43.30 மி.மீ. மழை

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டி யில் 34 மி.மீ. மழை பதிவாகி உள்ளது ஓமலூர் 5, எடப்பாடி 3, ஆத்தூர் 1, சேலம் 0.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 43.30 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×