search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே மலைப்பகுதியில் கள்ள சாராய வேட்டை: 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
    X

    கள்ள சாராயத்துக்காக பயன்படுத்தப்பட்ட பேரல்களை படத்தில் காணலாம்.

    செஞ்சி அருகே மலைப்பகுதியில் கள்ள சாராய வேட்டை: 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

    • கஞ்சூர் மலைப்பகுதியில் கள்ள சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
    • சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி துணைபோலீஸ் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சுபா, நல்லன்பிள்ளை பெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் போத்துவாய் கஞ்சூர் மலைப்பகுதியில் கள்ள சாராய பேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக 2 பேரல்களில் 400 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறல் போட்டு வைத்திருந்தவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×