search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சி  1-வது வார்டில் துணை மேயர் ஆய்வு
    X

    1-வது வார்டில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

    நெல்லை மாநகராட்சி 1-வது வார்டில் துணை மேயர் ஆய்வு

    • நெல்லை மாநகராட்சி தச்சை மண்டலத்துக்கு உட்பட்ட 1-வது வார்டில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ கடந்த 2 நாட்களாக ஆய்வுப் பணி களை மேற்கொண்டு வருகிறார்.
    • அவரது சொந்த வார்டில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி தச்சை மண்டலத்துக்கு உட்பட்ட 1-வது வார்டில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ கடந்த 2 நாட்களாக ஆய்வுப் பணி களை மேற்கொண்டு வருகி றார்.

    அவரது சொந்த வார்டில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இன்று இந்திராநகர், செல்வ விக்னேஷ் நகர், கணபதி மில் காலனி, மல்லிகை தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண் டார். அந்த பகுதியில் குடியி ருக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி, தெருவிளக்குகள் உள்ளிட்ட வசதிகளை கேட்டறிந்தார். பின்னர் சாக்கடை நீர் தொய்வின்றி செல்வதற்கு ஏதுவாக வாறுகால்கள் அமைக்கும் பணி, புதிதாக வாறுகால் தேவைப்படும் இடங்கள் உள்ளிட்டவைகளை துணை மேயர் ராஜு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வு பணியின் போது உதவி ஆணையாளர் வாசுதேவன், உதவி செயற்பொறி யாளர் லெனின், உதவி பொறியாளர் நாகராஜன், மேஸ்திரி ஜானகிராமன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×