search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நண்பர்களிடையே தகராறு:  காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மீது தாக்குதல்  -2 பேர் கைது
    X

    நண்பர்களிடையே தகராறு: காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மீது தாக்குதல் -2 பேர் கைது

    • மணிகண்டனை, மற்ற 3 பேரும் சேர்ந்து தாக்கினார்கள்.
    • சுப்பிரமணி, நந்தகுமார் ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி, பழைய பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது22). கூலி தொழிலாளி. அதேபகுதியை சேர்ந்த மணிகண்டனின் நண்பர்களான தனுஷ் என்கிற சுப்பிரமணி (20), நந்து என்கிற நந்தகுமார் (24) மற்றும் காதர் பாட்ஷா ஆகியோர் மணிகண்டனிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டனர். பணம் தர மறுத்த மணிகண்டனை, மற்ற 3 பேரும் சேர்ந்து தாக்கினார்கள்.

    இதில், காயமடைந்த மணிகண்டன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். அங்கு மது போதையில் சென்ற தனுஷ், நந்து ஆகிய 2 பேரும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை டாக்டர் முகமது இஸ்மாயிலிடம், மணிகண்டனுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது எனக்கூறி தகராறு செய்தனர்.

    மேலும் அவரை தாக்கியதுடன்அங்கிருந்த டேபிள், கதவுகளையும் அடித்து உடைத்துள்ளனர். இது தொடர்பாக மணிகண்டன் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர் முகமது இஸ்மாயில் கொடுத்த புகார்களின் பேரில் பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்வது, அரசு மருத்துவரை பணி செய்யாமல் தடுத்தது, உள்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து தகராறில் ஈடுபட்ட சுப்பிரமணி, நந்தகுமார் ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×