என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
- அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பசுமை காய்கறிகளை வழங்க வேண்டும்.
- குழந்தைகள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்கான கட்டிட வசதியை அமைத்துத்தர வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி, அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அமிர்தசரோவர் திட்டத்தின் கீழ் தூர்வாரி, ஆழ்படுத்தப்பட்ட ஊராட்சி குளத்தையும், மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் இயக்குனர் அமுதவல்லி மற்றும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கட்டிடப் பணிகளை துரிதமாகவும் தரமாகவும் கட்ட வேண்டும்.
அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பசுமை காய்கறிகளை வழங்க வேண்டும். மேலும் அங்கன்வாடி குழந்தைகள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்கான கட்டிட வசதியை அமைத்து தர வேண்டும் என்றார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், சீர்காழி ஆர்டி.ஓ அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்கு மார், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார்.
உதவி செய ற்பொறியாளர் சீதாலட்சுமி, ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி,வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் பூர்ணசந்திரன், தாரா, பலராமன், ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி சுப்பையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்