search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைஞாயிறு பகுதியில் தூர்வாரும் பணி
    X

    தூர்வாரும் பணி நடைபெற்றது.

    தலைஞாயிறு பகுதியில் தூர்வாரும் பணி

    • 54.8 கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்கால்கள் ரூ. 63 லட்சம் செலவில் தூர்வாரப்படுகின்றன.
    • 90 சதவீத தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதியில் பொதுப்ப ணித்துறை வென்னாற்று பிரிவு அலுவ லகத்தின் மூலம் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    வேதா ரண்யம் தாலுக்கா தலை ஞாயிறு ஒன்றியம் பகுதியில் உள்ள பழவனாறுவெண் மணச்சேரி வடபாதி வடிகால் பொன்னேரி வாய்க்கால் மேட்டுப்பள்ள வாய்க்கால் ஈசனூர் வாய்க்கால் உள்ளிட்ட 54.8 கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்கால்கள் ரூ. 63 லட்சம் செலவில் தூர்வாரப்ப டுகின்றன.

    இந்த பணியினை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் மதியழகன் மற்றும் பொதுப்ப ணித்துறை பணியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தலைஞாயிறு பகுதியில் 90 சதவீத தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×