search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் குடிநீர் பிரச்சினை 15 நாட்களுக்குள் சரி செய்யப்படும்:நகர் மன்ற தலைவர் உறுதி
    X

    பண்ருட்டி நகர் மன்ற கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பண்ருட்டியில் குடிநீர் பிரச்சினை 15 நாட்களுக்குள் சரி செய்யப்படும்:நகர் மன்ற தலைவர் உறுதி

    • வசந்திரமேஷ் 2 வருடமாக சமுதாய கூடம் பழுது அடைந்து உள்ளது என கூறினார்.
    • குடி நீர், தெருவிளக்கு பிரச்சனைகள் 15 நாட்களுக்குள் சரி செய் யப்படும் என கூறினார்.


    பண்ருட்டி நகர் மன்ற கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு துணைத் தலைவர் சிவா,கமிஷனர்மகேஸ்வரிமுன்னிலைவகித்தனர். என்ஜினீயர் பவுல் செல்வம்,துப்புரவு அலுவலர் முருகேசன், மேலாளர் அசோக்குமார், மற்றும்கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்ட அஜெண்டாவை உதவியாளர்சோமசுந்தரம் படித்தார்.

    கூட்டத்தில் நடந்தவிவாதம் வருமாறு:- கிருஷ்ணராஜ் (வாழ்வுரிமை கட்சி): வார்டு பகுதியில் குடிநீர் இணைப்புகள் உடனே வழங்க வேண் டும். பொதுமக்கள் கடு மையாக அவதிப்பட்டு வருகின்றனர். வசந்திரமேஷ் (தி.மு.க): 2 வருடமாக சமுதாய கூடம் பழுது அடைந்து உள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ளது. தெருவிளக்குகள் எரியவில்லை. மோகன் (அ.தி.மு.க): எனது வார்டில் உள்ள குறைகளைசரி செய்யக்கோரி கொடுத்த மனு க்கள் என்ன ஆனது.ஆதி திராவிட மக்கள் வசிக்கும் நந்தனார் காலணியில் 3சாலைகள் உள்ளன. அதில் ஒன்று மண்சாலையாக உள்ளது. ஒன்று நடக்க கூட முடியாத அளவுக்கு உள்ளது உடனே சரி செய்ய வேண்டும் .

    ராமலிங்கம் (தி.மு.க.): கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்றுபண்ருட்டி நகரில் சுற்றி திரிந்த 50க்கும் மேற்பட்ட பன்றி களைபிடித்து வனப்பகுதியில் விட்டதற்கு நன்றி. சோழன் (தி.மு.க): 50 வருடமாகவே ஓடாத தேரை ஓடவைத்ததற்கும் வார்டு பகுதியில்வளர்ச்சி பணிகளை உடனே நிறைவேற்றி தந்தமைக்கு நன்றியையும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆணையாளர் மகேஷ்வரி: ஆதிதிராவிட மக்கள் அதிகம்வசிக்கும் பகுதியில் நமக்கு நாமேதிட்டத்தின் மூலம் பணிகள் செய்ய 5-ல் ஒரு பங்குஅதாவது திட்ட மதிப்பீடு ஐந்து லட்சம் என்றால் ஒரு லட்சம் செலுத்தினால் போதும் . ராமதாஸ்(சுயே): ரயில்வே காலணியில் சாலை, தெரு விளக்குகால்வாய் அமைத்து தர வேண்டும்.

    ஜரின்னிசா (தி.மு.க) தண்டு பாளையத்தில் கழிவு நீர் வாய்க்காலில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலை எல்லாம் வழிந்து சுகாதாரகேடுஏற்படுகிறது. ஏ.கே.எஸ். மண்டபம் பின் புறம் உள்ள தெருக்களில் சாலை வசதி கழிவுநீர் வாய்க்கால் மற்றும் தெரு மின் விளக்கு அமைத்து தரவேண்டும்

    தலைவர் ராஜேந்திரன்: ஓட்டு போட்டவர்கள், போடாதவர்கள், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பார்ப்பதில்லை .பண்ருட்டி நகராட்சியில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து வாடுகளிலும் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 33 வார்டுகளில் பொதுமக்கள் நலன் கருதி வளர்ச்சி பணிகள் செய்யப்படும். நாய்கள் பிடிக்கப்படும். சமுதாய கூடம் பணி டெண்டர் விடப்பட்டுள்ளது. குடி நீர், தெருவிளக்கு பிரச் சனைகள் 15 நாட்களுக்குள் சரி செய் யப்படும். ெரயில்வே காலணியில் கல்வெட்டு அமைத்து சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் . பண்ருட்டி நகராட்சியில் முதன்மை நகராட்சியாகபாடுபட்டுவருகின்றேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×