என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு முகாம் நடந்தது.
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
- ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.
- போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, நாலுவேதபதி ஊராட்சி சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.
விழாவில் வேதாரண்யம் டி.எஸ்.பி.
முருகவேல், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன், ஊராட்சி மன்ற துணை தலைவர் தங்கராசு, ஊராட்சி செயலாளர் கண்ணன், அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story