என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வரத்து குறைவால் கடத்தூரில் தக்காளி விலை உயர்வு
Byமாலை மலர்2 Jun 2023 9:44 AM GMT (Updated: 2 Jun 2023 10:14 AM GMT)
- ஒரு பாக்ஸ் 400 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- தக்காளி விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்
கடத்தூர், ஜூன்.2-
தருமபுரி மாவட்டம், கடத்தூரை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர் பயிராக தக்காளி பயிர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு , பாக்ஸ் 100 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அறுவடை கூலி கூட கிடைக்காத நிலையில் கடும் விரக்தியில் விவசாயிகள் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வரை 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் 200 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட தக்காளி, இன்று வரத்து குறைவால் திடீரென விலை உயர்ந்து 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் 400 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் தக்காளி பயிர் செய்துள்ள விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தக்காளி விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X