search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்வாய் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் இடையே பேச்சு வார்த்தை
    X

    கால்வாய் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் இடையே பேச்சு வார்த்தை

    • கடந்த சில ஆண்டுகளாக மழை நீர் முழுமை யாக வெளி யேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்ப தாக அய்யப்பா நகர் பொது மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
    • இந்த வழியே மழை நீர் வடிகாலை அமைத்தால் தண்ணீர் தேங்கும் என சோழன் வீதி பொதுமக்கள் கால்வாய் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சென்னிமலை:-

    சென்னிமலை பேரூ ராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் பஸ் நிலையம், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் இருந்து மழைக் காலங்களில் வெளியேறும் மழைநீர் 6-வது வார்டுக்கு உட்பட்ட அய்யப்பா நகரில் உள்ள வடிகால் கால்வாய் வழியாக அறச்சலூர் ரோட்டை சென்றடையும்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழை நீர் முழுமை யாக வெளி யேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்ப தாக அய்யப்பா நகர் பொது மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் அய்யப்பா நகருக்கு செல்லும் மழை நீரை பாதி யாக தடுக்கும் வகையில் சென்னிமலை பேரூ ராட்சியில் ரூ.1 கோடி மதிப்பில் 11-வது வார்டுக்கு உட்பட்ட சோழன் வீதி வழியாக மழை நீரை கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்க ப்பட்டு இதற்காக பஸ் நிலையம் அருகே தார் ரோட்டின் குறுக்கே பால மும் கட்டி முடிக்கப்பட்டது.

    ஆனால் இந்த வழியே மழை நீர் வடிகாலை அமைத்தால் தண்ணீர் தேங்கும் என சோழன் வீதி பொதுமக்கள் கால்வாய் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் 6-வது வார்டுக்கு உட்பட்ட அய்யப்பா நகரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு வரும் மழை நீரை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    இதனால் கால்வாய் அமைக்கும் பணி பாதி யிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் 2 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களிடம் சுமூக தீர்வு காண்பதற்கு சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பெருந்துறை தாசில்தார் சிவசங்கர் தலைமை தாங்கி னார். சென்னிமலை பேரூ ராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், செயல் அலுவலர் ஆயிஷா ஆகியோர் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் 6-வது மற்றும் 11-வது வார்டுகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    அந்த பகுதிகளை சேர்ந்த இரு தரப்பு மக்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதில் உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் இரு தரப்பு மக்களின் கோரிக்கைகள் குறித்து ஈரோடு கலெக்டரி டன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

    Next Story
    ×