search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலையில் 12-ந் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம்
    X

    சென்னிமலையில் 12-ந் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம்

    • ஏ.ஐ.டி.யு.சி. விசைத்தறி மற்றும் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சென்னிமலை வட்டார சிறப்பு பேரவைக் கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இந்த பேரவைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    ஏ.ஐ.டி.யு.சி. விசைத்தறி மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சென்னிமலை வட்டார சிறப்பு பேரவைக் கூட்டம், சங்க அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

    ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர் பொன்னுசாமி, கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் நாகப்பன், கட்டடத் தொழி லாளர் சங்க ஒன்றியத் தலைவர் ராஜ்குமார், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

    சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இந்த பேரவைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சென்னிமலை வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறி நெசவாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது கூலி மற்றும் போனஸ் கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவிற்கும், சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்கள் சங்கத்திற்கும் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட 3 ஆண்டு கால ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது.

    ஆகவே இந்த ஆண்டு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வாழ்க்கை செலவுகள் கணிசமாக அதிகரி த்துள்ளதை கருத்தில் கொண்டு பின்வரும் கோரி க்கைகளை முன்வை ப்பதென ஏகமனதாக முடிவு செய்ய ப்பட்டது.

    அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் 2021, 2022-ம் ஆண்டுக்கான போனசாக அவர்கள் ஈட்டிய கூலியில் 25 சதவீதம் வழங்க வேண்டும். கூலி உயர்வாக தற்போது பெற்று வரும் கூலியில் 40 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.

    அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் தேசிய, பண்டிகை விடுமுறை நாட்கள் சட்டப்படி வருடத்திற்கு 9 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் வழங்க வேண்டும்.

    விசைத்தறி தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் மருத்துவ வசதி பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்கான பிரீமியத் தொகையை விசைத்தறி உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கை கள் மீது உடன டியாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தி, தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே போனஸ் வழங்க வேண்டும் என சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்கள் சஙகத்தை பேரவை கூட்டம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

    மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 12-ந் ேததி மாலை 4 மணிக்கு சென்னிமலையில் கோரிக்கை பேரணி - ஆர்ப்பாட்டம் நடத்துவ தென்று முடிவு செய்யப்பட்டது.

    சென்னிமலை பி.ஆர்.எஸ்.ரோடு சங்க அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. மேலும் 12-ந் தேதி மதியத்திற்கு மேல் விசைத்தறிகளை நிறுத்திவிட்டு அனைத்து தொழிலாளர்களும், பேரணி-ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

    Next Story
    ×