search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானூரில் வாகனம் மோதி விவசாயி பலி
    X

    மானூரில் வாகனம் மோதி விவசாயி பலி

    • மாடசாமி மானூர் பஜார் பகுதிக்கு டீ குடிப்பதற்காக அவர் சைக்கிளில் சென்றார்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மாடசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள குப்பனாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 62). விவசாயி. கடந்த 21-ந் தேதி மானூர் மெயின் ரோட்டில் பஜார் பகுதிக்கு டீ குடிப்பதற்காக அவர் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மாடசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை மாடசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×