என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூர் அருகே டிரோன் மூலம் ஆட்கொல்லி யானையை கண்காணிக்கும் வனத்துறையினர்
- யானைகள் கூட்டத்தை வனத்துறையின் அதிவிரைவு படையினா் வனத்துக்குள் விரட்டினா்.
- ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஓவேலி பகுதியில் காட்டு யானை ஒன்று அண்மையில் 2 பேரை கொன்றது. இந்த யானை தற்போது கிளன்வான்ஸ் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த ஆட்கொல்லி யானை மீண்டும் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் வனத்துறையினா் ட்ரோன் கேமரா மூலம் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.
இதற்கிடையே, நியூஹோப் பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் கூட்டத்தை வனத்துறையின் அதிவிரைவு படையினா் கிளன்வான்ஸ் பகுதியில் உள்ள வனத்துக்குள் விரட்டினா்.
Next Story