search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது
    X

    பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது

    • கீழவாசலை சேர்ந்த முகமது உஸ்மான் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.
    • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    வல்லம்:

    தஞ்சை பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாணவியின் தந்தை குடித்துவிட்டு வந்துள்ளார்.

    பின்னர் மாணவியின் தாயை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மாணவியின் தாய் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் தஞ்சை கீழவாசலை சேர்ந்த முகமது உஸ்மான் (வயது 39) என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.

    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முகமது உஸ்மான் கடந்த 4-ம் தேதி மாணவியிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இது பற்றி அந்த மாணவி வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது உஸ்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×