search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாண்டமங்கலத்தில்   வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை
    X

    தற்கொலை செய்த கார்த்தி 

    பாண்டமங்கலத்தில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை

    • நேற்று வீட்டில் தனியாக இருந்த கார்த்தி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கார்த்தி ( வயது 21). இவர் சில பிரச்சினைகள் காரணமாக விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த கார்த்தி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு கதறி அழுதனர். உடனடியாக கார்த்திகை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து முருகேசன் பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார் . புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×