search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் முட்டைகோசுக்கு போதிய விலை இல்லை
    X

    நீலகிரியில் முட்டைகோசுக்கு போதிய விலை இல்லை

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.25 வரை கொள்முதல் செய்யப்பட்டது
    • அறுவடையும் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்கின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், மேரக்காய், பீன்ஸ், காலிபி ளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    அங்கு இருந்து தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் உள்ள ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, குடுமனை, காக்காசோலை, குருக்குத்தி, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக போதிய மழை பெய்து வருகிறது. எனவே காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்து உள்ளன.

    மலை காய்கறிகளில் முட்டைகோஸ் 90 முதல் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கிலோவுக்கு ரூ.25 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது முட்டை கோசுக்கு கிலோ ரூ.9-க்கு மட்டுமே கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இந்த விலை வீழ்ச்சியால் அதை பயிரிட்ட விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து ஈளாடா கதவுத்தொரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒரு கிலோ முட்டைகோஸ் விளைவிக்க ரூ.6 செலவாகிறது. இதனை அறுவை செய்து மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்ப போக்குவரத்து செலவு, தொழிலாளர் கூலி உள்பட எக்கச்சக்கமாக செலவாகிறது. எனவே முட்டைக்கோஸ் பயிரிட்ட விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை. எனவே, நேரடியாக தோட்டங்களுக்கே வந்து கொள்முதல் மற்றும் அறுவடையும் செய்து வரும் தனியார் நிறுவனங்களுக்கு முட்டைகோசை கிலோ ரூ.8க்கு விற்பனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×