search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை-அவினாசி சாலையில் விபத்துக்கள் அதிகரிப்பு
    X

    கோவை-அவினாசி சாலையில் விபத்துக்கள் அதிகரிப்பு

    • எல்.ஐ.சி சிக்னலில் மேம்பாலம் பணிக்காக சிக்னலில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்

    கோவை,

    கோவை-அவினாசி சாலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் மேம்பால பணிகள் மெதுவாக நடந்து வந்தாலும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.

    குறிப்பாக சேலம் மற்றும் திருப்பூரில் இருந்து கோவைக்கு வரும் புதிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    எல்.ஐ.சி சிக்னலில் மேம்பாலம் பணிக்காக சிக்னலில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் உப்பிலிபாளையம் சிக்னல் முதல் லட்சுமி மில் சிக்னல் வரை சாலையில் ஆங்காங்கே யூடன் முறை அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

    மேலும் விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. போக்குவரத்து மாற்றம் செய்வதற்காக ஆங்காங்கே சாலைகளில் யூடன் முறை அமைக்கப்பட்டுள்ளதால் கோவை விமான நிலையம் சிக்னல் முதல்-லட்சுமி மில் சிக்னல் வரை இரவு நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    இந்நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக மாலை வேலைகளில் மழை பெய்து வருவதால் சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உருவாகுகிறது.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    பாலம் கட்டப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்தக் கட்டுமான பணி எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் கட்டப்படுவதைத்தான் கண்டிக்கிறோம்.

    பாலப் பணிகளுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டி–ருந்தாலும் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்ற முன்னறிவிப்பு பலகை எதுவும் முறையாக வைக்கவில்லை.

    அத்துடன் கட்டுமானப்பணிகள் நடைபெறும் சாலையில் போதிய பாதுகாப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் கோவை-அவிநாசி சாலையில் பயணம் செய்யும் புதிய வான ஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

    இங்கே மட்டுமல்லாமல் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் பாலம் கட்டுமான பகுதிகளிலும் இதுபோல் முன்னெச்சரிக்கை பலகை, தடுப்புச்சுவர் இல்லாததால் பல விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×