search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் நாளை கார்மல் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா
    X

    கார்மல் மேல்நிலைப்பள்ளி 

    நாகர்கோவிலில் நாளை கார்மல் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா

    • சபாநாயகர் அப்பாவு பங்கேற்கிறார்
    • 1922-ம் ஆண்டு கொல்லம் ஆயராக இருந்த அலாசியுஸ் பென்சிகரால் நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராஜாக்க மங்கலம் ரோட்டில் உள்ள ராமன்புதூரில் கார்மல் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இது 1922-ம் ஆண்டு கொல்லம் ஆயராக இருந்த அலாசியுஸ் பென்சிகரால் நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது.

    1932-ம் ஆண்டு கோட்டார் ஆயராக இருந்த லாரன்ஸ் பெரேராவால் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. அதைத் தொடர்ந்து மேல்நிலைப்பள்ளியானது. இந்த பள்ளி தொடங்கி நூற்றாண்டு நிறைவு விழா இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இன்று பகல் 2 மணிக்கு முன்னாள் மாணவர்கள் இயக்கம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிக்கு குருகுல முன் னாள் முதல்வர் பால்லியோன் தலைமை தாங்கி பேசுகிறார். வளாக பொருளாளர் குமார் சடேனிஸ், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசு நேசம், முன்னாள் மாணவர் இயக்க துணைத்தலைவர் பால்டுவின் புரூஸ், ஆசிரியர் அலுவலர் செயலாளர் பபிலன் ஆகியோர் முன் னிலை வகிக்கிறார்கள். முன்னாள் மாணவர் இயக்க இயக்குனரும், பள்ளி தலைமை ஆசிரியருமான மரிய பாஸ்டின் துரை வரவேற்கிறார். செயலாளர் ஜான் உபால்டு அறிக்கை சமர்ப்பிக்கிறார். பள்ளியின் தாளாளர் ஜெரோம் ஆசியுரை வழங்குகிறார்.

    முன்னாள் மாணவரும் தபால் துறையின் முன்னாள் இயக்குனருமான மெர்வின் அலெக்சாண்டர், பொருளா தார நிபுணரும், சபையின் முன்னாள் தூதருமான ஜெப மாலை வினான்சி ஆராய்ச்சி ஆகியோர் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசி ரியர் மற்றும் அலுவலர்களை சிறப்பிக்கிறார்கள். இதில் தாம்பரம் போலீஸ் கமிஷ னர் அமல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாதனை யாளர் களை கவுரவிக்கிறார். ஸ்டெல்லா மேரீஸ் குழுமங் களின் தலைவர் சார்லஸ், இயேசு சபை மதுரை மறை மாநில தலைவர் டேனிஸ் பொன்னையா கார் மல் பள்ளியின் நலம் விரும்பிகள், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் மாணவர் இயக்க செயற்குழு உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். முன்னாள் மாணவர் இயக்க தலைவர் டாக்டர் டங்ஸ்டன் ரமேஷ் நன்றி கூறுகிறார்.

    மாலையில் பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் 'இன்றைய இளைஞர் போக்கு வாழத் தக்கதா? வருந்தத்தக் கதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெ றுகிறது. முன்னாள் மாணவர் இயக்க பொருளாளர் அமல் ராஜ் நன்றி கூறுகிறார். மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆசிரியர் அருள் ராஜன், ஐ.எம்.வி. ஜெரோம், சந்தான இருதயராஜ், பீட்டர் ஷா ஆகியோர் நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கு கிறார்கள்.

    நாளை மாலை 5 மணிக்கு நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி விழா மலரை வெளியிட்டு உரை யாற்றுகிறார். சிறப்பு விருந்தி னர்களாக நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ், கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, தொழில் அதிபர் மைக் கேல் ஆண்டனி, இயேசுசபை மன்ற மாநில தலைவர் டேனிஸ் பொன்னையா ஆகியோர் பரிசு வழங்கி, வாழ்த்தி பேசுகிறார்கள்.

    கார்மல் இல்ல அதிபர் ஜெரோம், அருட்பணியாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசுநேசம் வரவேற்கிறார். பள்ளி தலைமை ஆசிரியர் மரியபாஸ்டின்துரை ஆண்ட றிக்கையை சமர்ப்பிக்கிறார். அதைத்தொடர்ந்து மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முடிவில் ஆசிரியர் அலுவலர் செய லாளர் பபிலன் நன்றி கூறுகிறார்.

    Next Story
    ×