என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திற்பரப்பு பேரூராட்சி தும்பக்கோட்டில் அரசு திட்டங்களின் புகைப்பட கண்காட்சி
    X

    புகைப்பட கண்காட்சியை இளைஞர்கள் பார்வையிடும் காட்சி 

    திற்பரப்பு பேரூராட்சி தும்பக்கோட்டில் அரசு திட்டங்களின் புகைப்பட கண்காட்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாடு அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • பொதுமக்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.

    நாகர்கோவில்:

    திற்பரப்பு பேரூராட்சிக் குட்பட்ட தும்பக்கோடு பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை யின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.இதுகுறித்து கலெக்டர் அரவிந்த் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், குமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. பொதுமக்கள் இதனை பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைத்து திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×